இன்று ஒரு குறள் !

செவ்வாய், ஏப்ரல் 22, 2008

மாற்றப்பட வேண்டியது வார்த்தையை அல்ல, வாழ்க்கையை.

விழுப்புரத்தில் 'தாய் விழுதுகள்' அமைப்பின் சார்பில் நடைபெற்ற அரவாணிகளின் கலைப்பேரணி மற்றும் சங்கமம் கலை நிகழ்ச்சியில் பேசிய கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் அரவாணிகளைப்பார்த்து, 'உங்களை நான் அரவாணிகள் என்று சொல்ல மாட்டேன்' என்று கூறியுள்ளார்

அப்படியானால் அரவாணிகளை அரவாணிகள் என்று கூறுவது அவர்களை அவமானப்படுத்தும் செயலா? அது என்ன அவ்வளவு மட்டமான சொல்லா? அப்படியானால் அந்த சொல்லை மட்டும் மாற்றி விட்டால் மட்டும் அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விடுமா?

பிரச்சினை பெயரில் இல்லைஅவர்கள் வாழ்க்கை நிலையில் இருக்கிறதுஅந்த நிலைமையை சரிசெய்ய, அவர்களை சமூகத்தின் மற்ற இரு பாலர்களுக்கும் (ஆண்,பெண்) சமமான தரத்துடன் சமுதாயத்தில் வாழ வழி செய்ய சிந்திக்க வேண்டுமேயன்றி, அவர்களைச்சுட்டும் வார்த்தைகளை மாற்றி பயனில்லை

இல்லாவிட்டால் பல்லாண்டுகாலமாய் உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைவேலை செய்ய வைக்கப்பட்டு வந்ததொரு வர்க்கத்தின் கொச்சையான பெயர், கடவுளின் குழந்தைகள் என்ற அர்த்தத்தில் 'ஹரிஜன்' என்று மகாத்மாவினால் மாற்றப்பட்டும், பின் 'தாழ்த்தப்பட்டோர்', 'அட்டவணை இனத்தவர்' என்று பல்வேறு கட்டங்களில் மாறியும் வந்து இன்று 'தலித்' என்று பெயர் தாங்கி நிற்கிறது என்றாலும், அவர்களின் வாழ்க்கைத்தரம் என்னமோ அப்படியேதான் இருக்கிறதுஇன்றும் இரட்டைக்குவளை டீ கடை கிராமங்கள் இருக்கின்றன்

ஆதலால் பிரச்சினை பெயரில் இல்லை, அவர்களுக்கு முன்னேறும் வாய்ப்பு தரும் நம் செயலில் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக