இன்று ஒரு குறள் !

திங்கள், ஏப்ரல் 09, 2012

ராமஜெயம் கொலை - திணரும் போலீஸ்

முன்னால் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தின் கொலைக்காண நோக்கம் மற்றும் கொலைகாரன்(ரி) பற்றி எந்த துப்பும் கிடைக்காமல் போலீஸார் தலையை பிய்த்து கொண்டிருப்பது போல் தெரிகிறது .

தினம் ஒரு செய்தியை மீடியாக்கள் வெளியிடுகின்றன.

காலை 5 மணிக்கு வாக்கிங் போன போது கடத்தி கொல்லப்பட்டார் அரசியல் தகராறில் நடந்த கொலை என்றனர் முதலில்.பிறகு ரியல் எஸ்டேட் விவகாரம் என்று ஆகி, தற்போது பொம்பளை விவகாரமாக  என் வந்திருக்கிறது.

மேலும் இப்போது அவர் வாக்கிங் போனபோது கொல்லப் படவில்லை முதல்னாள் இரவில்  தொடுப்பு வைத்திருந்த பெண் வீட்டில் தங்கியிருந்த போது கடத்தப்பட்டு விடிகாலை 2.50க்கு கொல்லப்பட்டார் என்கின்றனர்

இன்னும் என்னென்ன காரணங்கள், விவகாரங்கள் வெளிவருமோ...

நம் போல் ஒரு சாமான்யன் கொலையுண்டால் ஒரு வாய்க்கா வரப்பு தகராறோ, பங்காளி சண்டையோ, கடன் தகராறோ உடனே கொலைக்கான நோக்கம் மற்றும் கொலையாளி எளிதில் ஊருக்கே தெரிந்து விடும்.

இவர்களை போல் ஊரை அடித்து உலையில் போடும் அரசியல் ரவுடிகள், எல்லா அயோக்கிய தனங்களையும் செய்து ஊர் முழுதும் எதிரிகளை உருவாக்கி வைத்திருப்பார்கள்.

வெளியில் யாருக்கும் தெரிய வராது என்ற நிலையில் சந்தர்ப்பம் கிடைத்தால், ஒரு சாமான்யனே தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்று விடுவான்.

அதனால் இவர்களுக்கு இருக்கும் எதிரிகளில் எவனுக்கு கொலை செய்ய சந்தர்ப்பம் வாய்த்தது என்பதே போலீஸாரின் புலனாய்வாக இருக்கும் என்பதே என் கருத்து.

ஆக மொத்தம் இதற்கு எது காரணமாக இருந்தாலும், யார் காரணமாக இருந்தாலும், இப்படிப்பட்ட கட்ட பஞ்சாயத்து பேர்வழிகள், அடுத்தவன் குடியை கெடுப்பவர்கள், அடுத்தவன் நிலம், வீட்டு பெண்கள் என ஆட்டையை போடும் அரசியல் ரவுடிகள், அவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும்  அழிந்து போவது தான் சமுதாயத்திற்கு நல்லது.