இன்று ஒரு குறள் !

திங்கள், டிசம்பர் 31, 2012

பெண்கள், வன்புணர்வு, பர்தா - நாம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்



நாம் எங்கு போய்க் கொண்டிருக்கிறோம். 21 ம் நூற்றாண்டிலிருந்து 22 ம் நூற்றாண்டை நோக்கியா இல்லை மீண்டும் கி.மு.வை நோக்கியா.

அறிவு ஜீவிகளாக கருதிக் கொண்டு சிலர் உதி்ர்க்கும் கருத்து்கள் அப்படித் தான் இருக்கிறது


 
இஸ்லாமிய பெண்கள் போல பெண்கள் அனைவரும் பர்தா அணிய வேண்டும் என்ற கருத்து முத்தை உதிர்த்திருப்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை நித்தியானந்தாவின் சொர்க்கத்தில் எல்லையற்ற இன்பங்களில் மூழ்கி கிடந்தவர். அதற்கு பலனாக இளைய ஆதின பதவியையே விலையாக தந்தவர்.

 
 இவரெல்லாம் சமுதாய நலனை பற்றி பேசவில்லை என யார் அழுதது.


இதைப் போன்ற இன்னொரு கருத்து முத்தை Dr. Anita Shukla என்ற விஞ்ஞானி, தான் ஒரு பெண் என்பதையும் மறந்து விட்டு கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.

‘Women instigate men to commit such crimes'. She accused the victim of being insensible as she was out of her house after 10 pm. Shukla claimed that if a girl wanders late at night with her boyfriend; such situations are bound to happen.


அதாவது   பாதிப்புக்கு உள்ளான அந்த பெண் இரவு பத்து மணிக்கு மேல் ஏன் வீட்டை விட்டு வெளியில் தன் ஆண் நண்பருடன் சுற்றி திரிய வேண்டும்.
 
அதனால் தான் இப்படி பாலியல் பலாத்காரத்திற்கு பலியாக நேரிட்டது.

அதாவது இரவில் வெளியில் செல்லும் உரிமை பெண்களுக்கு கிடையாது.
 
ஆண்கள் மட்டுமே இரவில் ஊர் சுற்றலாம், வீதியில் தண்ணி அடிக்கலாம் எதிரில் ஏதேனும் பெண்கள் தென்பட்டால் தங்கள் காம வெறியை தீர்த்து கொள்ளலாம்.
 
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பெண்ணின் குடலை வெளியில் உருவி போடலாம்.
 
ஆஹா என்னே சமத்துவம் என்னே சனநாயகம்.

மேலும் அந்த விஞ்ஞானி கூறுகிறார்

‘The victim should have surrendered when surrounded by six men, at least it could have saved her intestines'

அதாவது, அந்த பெண் தன்னை ஆறு பேர்  சூழ்ந்து பலாத்காரம் செய்ய முற்படுகையில் அவர்களுக்கு அடங்கி ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் தனது குடலை காப்பாற்றியிருக்கலாம்

ஆஹா என்னே ஒரு க(பெ)ண்ணியமான கருத்து. இதையே தான் தான் பெற்ற பெண்களுக்கும் சொல்லி வளர்ப்பாரோ என்னமோ.
 
அதாவது காஞ்சனா என்ற படத்தில ஸ்ரீமன், ஆவியை பார்க்கும் போதெல்லாம் வாய் கோணி கொண்டே படுத்து கொள்வார். அதைப் போல, எவனாவது காம பார்வை பார்த்து கொண்டே தன்னை நெருங்கினால்  பெண்களும் அவனுக்கு ஒத்துழைக்க தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என எதிர் பார்க்கிறாரோ இந்த மனிதாபிமானம் அற்ற பெண் விஞ்ஞானி.

 
 

குற்றம் செய்தவனை விட்டு விட்டு பாதிக்கப் பட்டவர்களுக்கே தண்டனை தரும் கூட்டம் இந்த கூட்டம்.
 
இவர்கள் சொல்வதை எல்லாம் நடைமுறைப் படுத்த ஆரம்பித்தால் எங்கே போய் நிற்கும் என் பாருங்கள்.
 .
இரவில் வெளியே போகாதே.
 
வேலை செய்வதால் வெளியே போக வேண்டிய சூழ் நிலை உள்ளதா -வேலைக்கே போகாதே.
 
பகலிலும் பாலியல் பலாத்காரம் நடந்து விட்டால் -
பகலிலும் வெளியே போகாதே
 
பள்ளிகூடம் போக வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால் - 
நீ படிக்கவே வேண்டாம்
 
கண்டிப்பாக வெளியில் சென்று தீர வேண்டிய நேரங்களில் - ஆண் துணையோடு,  ஜமுக்காளத்திற்குள் உன் உடலை ஒளித்துக் கொண்டு போ
 
 
பெற்றவர்கள் பாது காப்பில் அடைந்து கிட - திருமணம் வரை.
 
பின் கணவனுக்கு சமைத்து போடு, அவனது பாலியல் தேவைகளை தீர்த்து வை.
 
பின் பிள்ளைகளை பெற்று, வளர்.
 
பெண் பிள்ளை என்றால் அவளிடம்,   நீ பிறந்ததே, உன்னை கட்டிக்கப் போற ஆணுடைய பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யவே என சொல்லி கொடுத்து வளர்.
 
இதுக்கு ஏன் உனக்கு படிப்பு, வேலை, சுய மரியாதை எல்லாம்.

                                    



 மொத்தத்தில் பெண்களை பார்த்து இப்படி சொல்லி விடலாம் :

காப்பி மெஷின், வாஷிங்மெஷின், தையல் மெஷின் இவையெல்லாம் கேட்கிறதா எனக்கு படிப்பு வேண்டும் வேலை வேண்டும் சுயமரியாதை வேண்டும்  என்று.
 
ஆனால் ஆண்களின் செக்ஸ் மெஷின் ஆன நீ மட்டும் ஏன் இதை எல்லாம் எதிர் பார்க்கிறாய்.

ஞாயிறு, டிசம்பர் 30, 2012

ஒரு ஆணாய் நான் வெட்கப் படுகிறேன்

 
 
 
கனமான இதயத்துடன் 2012 ம் ஆண்டு நம்மை கடந்து செல்கிறது. காரணம் அடுத்தடுத்து வந்த வ்ண்புணர்வு சம்பவங்கள், செய்திகள்.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன போதிலும் இன்னும் நமது நாட்டில் பெண்கள் தனியாக, சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்பது எவ்வளவு வெட்க கேடான விஷயம்.
 
பெண்களை ஒரு உயிருள்ள சக ஜீவனாக, தனக்கென்று ஒரு மனமுள்ள மனுஷியாக,  உணர்வுகள் உள்ள ஒரு உயிரினமாக கருத முடியாத  ஆணாதிக்க மனநிலையிலே இந்த 21ம் நூற்றாண்டிலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய கேவலம்.
 
பெரும்பான்மையான ஆண்கள் அப்படி இல்லையே என்றாலும் கூட, அப்படிப் பட்ட சிறுபான்மையினருக்காக ஆண்கள் அனைவருமே தலை குனிய வேண்டியவர்கள் ஆகிறோம்.

நாட்டின் தலை நகரான டெல்லியில்  ஒரு சில நிமிட  அற்ப சுகத்திற்காக மிருக வெறி கொண்டு, எதிர் கால கனவுகளோடு துள்ளித் திரிந்த ஒரு 23 வயது மாணவியை வண்புணர்வு செய்து வெறியை தணித்து கொண்ட பின்னரும், எதிர்த்து போராடினாள் என்ற காரணத்திற்காக அவள் பிறப்புறப்பில் கையை விட்டு கையில் கிடைத்தை எல்லாம் வெளியில் இழுத்து எறிந்த அந்த மிருகங்கள் மற்றவர்களை போலவே ஒரு தாய்க்கு தான் பிறந்திருப்பார்களோ என்றே ஐயமுற வைக்கிறது.

அந்த மிருகங்களின் வேட்டைக்கு இரையான சகோதரி சில நாட்களாக மருத்துவத்தின் துணை கொண்டு உயிருக்கு போராடி வந்தவர் நேற்று முற்றிலும் தோற்றுப் போனார்.

இந்த மிருகங்களின் வேட்டை நடந்து கொண்டிருந்த நேரங்களில், யாருடைய கண்களிலும் இந்த வெறி சம்பவம் சிக்காமல் போனது தான் மிக பெரும் வேதனை.

ஒரு நாட்டின் தலை நகரிலே, வீதிகளில்  போலீஸார் ரோந்து சுற்றுவதில்லையா ?  வீடியோ கேமராக்கள் மூலம் நகரை போலிஸார் கண்காணிப்பதில்லையா? 
 
தலை நகரினிலே இந்த வசதிகள் இல்லையென்றால்,  நாட்டின் மற்ற பிற நகரங்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருக்கும் ?  இதில் இந்தியா வல்லரசாகிறது என்று விளம்பரம் வேறு.

இது தலைநகர லட்சணமென்றால், தாய்மையை மதிக்கும் நம் தமிழ் திரு நாட்டில் புனிதா என்ற 13 வயது இளங்குருத்து நாசப்படுத்தப் பட்டு கொல்லப் பட்டுவிட்டது.

இதை நாசப் படுத்தி விட்டு கொன்றவன், ஏற்கனவே குற்ற செயலில் ஈடுபட்டதால் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு வெளியில் வந்து, மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டு போலீஸாரால் தேடப் பட்டுக் கொண்டு வந்தவன்.

அப்படி தேடப்பட்டு வந்தவன் நிம்மதியாக சரக்கு வாங்கி மூச்சு முட்ட குடித்து விட்டு, போதை அதிகமாகி போக வேண்டிய ரயிலை தவற விட்டு ரயில் நிலையத்திலேயே மட்டையாகி கிடந்திருக்கிறான்.
 
அடுத்த நாள் தெளிந்து, மிக சாவகாசமாக நடை பயணமாக ஊர் போக, வழியில் வந்த அந்த சிறுமியை பார்த்ததும் வேட்டை ஆடி இருக்கிறான் (அந்த நேரம் அந்த சிறுமிக்கு பதில் ஆடு மாடு வந்திருந்தாலும் விட்டுருக்க மாட்டான் போல).
 
அது வரையிலும் போலிஸார் அவனை தேடிக் கொண்டே..டே..டே..டே..  இருந்திருக்கிறார்கள். ஒரு வேளை அவன் லோக்கலில் இருப்பது தெரியாமல் லண்டனிலும் பாரிஸிலும் போய் தேடிக் கொண்டிருந்தார்களோ என்னமோ.

இந்த இரண்டு சம்பவங்கள் தான் என்றில்லை இது போல் இன்னும் எண்ணற்ற வண்புணர்வுகள் அங்கங்கே தினமும் அ்ரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது.
 
சில சின்ன செய்தியாக பத்திரிக்கையில் இடம் பெறுவதும், பல போலீஸ் மற்றும் ஊடகங்களின் கண்களுக்கு படாமலே போய் விடுவதாகவும் இருக்கிறது.
 
ஒரு 3 வயது குழந்தையை கூட குழந்தை என்று பார்க்காமல், தன் இச்சையை தீர்க்க கிடைத்த எதிர் பாலினம் என்று பார்க்க தூண்டும் காம வெறி பிடித்தவர்களின் மத்தியில் தான் நாமும் வாழ்கிறோம் என் நினைக்கவே வேதனையாய் இருக்கிறது.
 
சகோதரிகளே, நான் வெட்கப் படுகிறேன் !
ஆம் !!  ஓரு ஆ்ணாய் நான் வெட்கப் படுகிறேன் !!!