இன்று ஒரு குறள் !

ஞாயிறு, அக்டோபர் 04, 2009

சிக்கனம் என்றால் என்ன விலை? - கேட்கிறார் பாரத நாட்டின் முதல் குடி மகள்

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாடீலுடன் அவரது உறவினர்கள் சுமார் 100 பேரும் சென்றுள்ளனர். தற்போது இவர்களின் செலவுக்கு யார் பணம் கொடுப்பார்கள் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குஜராத் மாநில அரசு அதிகாரிகள் விழித்து வருகின்றனர்.


எந்த அரசு கொடுத்தா என்ன ?  மொத்தத்தில் அது வரி மூலம் வசூலிக்கப்பட்ட மக்கள் பணம் தானே



உலகம் போற்றும் அணு விஞ்ஞானியாக இருந்து குடியரசுத் தலைவராக மாறிய அப்துல் கலாம் எளிமைக்கு பெயர் போனார். ஆடம்பர மாளிகை போல் இருந்த ஜனாதிபதி மாளிகை ஒரு சாதாரண இடமாக மாற்றியவர். மிக மிக சிக்கனமாக செயல்பட்டவர் கலாம்.

அது யார் தப்பு?  அவர் ஒரு இளிச்சவாயராக இருந்தால் மத்தவங்களா பொறுப்பு.



அவரை அடுத்து தற்போது குடியரசுத் தலைவராக பிரதீபா பாடீல் இருந்து வருகிறார். அடுத்த மாதம் 13ம் தேதி நடக்கவிருக்கும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அவரது மகன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

அதனாலென்ன ஜனாதிபதி பதவிக்கு வரவங்க  புனிதமாதான் இருக்கனும்னு நினைக்கிறது பழைய பஞ்சாங்க காலம் .



இந்நிலையில் தற்போது குஜராத் மாநிலத்தில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதீபா, தன்னுடன் 100 உறவினர்களையும் அழைத்து சென்று இருக்கிறார்.

100 பேர் மட்டும்தானே ....
எவ்வளவு பெருந்தன்மை பாருங்க

இவர்களுக்கு அங்குள்ள அரசு விருந்தினர் விடுதிகளில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
சோம்நாத் கோவில், காந்தி பிறந்த போர்பந்தர், கிர் காடு மற்றும் துவாரகா கோவில் ஆகியவற்றுக்கு செல்ல இருக்கிறார் பிரதீபா.
மகாராஷ்டிராவை சேர்ந்த இவர்களுக்காக குஜராத்தில் உள்ளூர் பகுதிகளை சுற்றி பார்க்க ஏசி பஸ் மற்றும் கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, குடியரசுத் தலைவருடன் வரும் இந்த மெகா உறவினர் கூட்டத்தின் செலவுகளை யார் ஏற்பார்கள் என்பதை இதுவரை குடியரசுத் தலைவர் மாளிகை சொல்லவில்லையாம்.
குடியரசுத் தலைவரின் அலுவலர்கள் கூட, வந்திருப்பவர்களின் தனி செலவுகளுக்கு பணம் கொடுப்பது பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை என்றார்.


டிஸ்கி : அப்துல்கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபொழுது, ஒரு முறை அவருடைய உடன்பிறந்த அண்ணன், தன் தம்பியை பார்க்க வந்து சில நாட்கள் ஜனாதிபதி மாளிகையில் தங்கினார். அவருக்கான செலவுகளுக்கு ஆன பணத்தினை தன் சொந்த காசில் இருந்து அப்துல்கலாம் அவர்கள் அரசுக்கு கட்டினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

வாழ்க ஜனநாயகம்!

சனி, அக்டோபர் 03, 2009

அனல் பறக்கும் பதிவுலகம் !

பொதுவாகவே பதிவுலகம் அவ்வப்போது சூடாகுவதும் பின் சுருங்குவதுமாகவே இருக்கும். ஆனால் இந்த முறை குறுகிய  நாட்களிலேயே   இரண்டு முறை வெப்பம் 150°F யை தாண்டியது.

சூட்டுக்கு காரணம்
1.'போலி' டோண்டு
2. 'நிஜ' கமல்.

நீறு பூத்த நெருப்பாகவே இருக்கும் போலி டோண்டு விவகாரம், ஒரு பிரபல பத்திரிக்கையில் எழுதிய ஒரு பிரபல பதிவரின் கட்டுரையை தொடர்ந்து, பெரு நெருப்பாய் பற்றிக் கொண்டது. தட்டிக்கேட்ட பதிவு, கண்டன பதிவு, எதிர் பதிவு, ஆதரவு பதிவு, அற சீற்றம், புற சீற்றம் ஆராய்ச்சி கட்டுரை, 'இத்தோடு நிறுத்திக்கோ' என்று வேண்டுகோள் பதிவு இப்படி பதிவுலகமே அல்லலோகப்பட்டு ஒரு வழியாக தணிவடைந்த வேளையிலே அடுத்த ரவுண்டின் புண்ணியத்தை கமல் கட்டி கொண்டார்.

உன்னை போல் ஒருவன் படத்தை பதிவர்கள் அடித்து, துவைத்து, கிழித்து, தோரணமாக்கி தொங்க விட்டார்கள். சாதரணமான விமர்சனங்களிருந்து நுண்ணரசியல் விமர்சனங்கள் வரை ஏராளமான பதிவுகள் சூடு பரத்தின. இந்த அத்தனை பதிவுகளின் சுட்டிகளையும் பதிவர் உண்மை தமிழன் தனது பதிவில் ஒரு இடுகையாக இட்டு, 'உன்னை போல் ஒருவன் பதிவுகளின்  விக்கிபிடியா' வாக மாறி வாசகர்களுக்கு உதவினார். நான் கூட படம் பார்த்த பின், அந்த பதிவுகளை இவரின் இடுகை மூலமே படித்தேன். [சற்றேயொப்ப 100 பதிவுகளையும் அதன் பின்னூட்ட விவாதங்களையும் படித்து முடிக்க எனக்கு மூன்று நாட்கள் ஆனது :(   ]

 சில பதிவர்கள், இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா என்று கமலே மண்டையை பிய்த்துக்கொள்ளூம் வண்ணம், கமலின் நுண்ணரசியலை கண்டுபிடித்து கண்டித்தனர்.

கமலே அறியாத கமலை துப்பறிந்து கமலுக்கே அறிமுகப்படுத்தினர்.

அடுத்த படம் எடுப்பதற்கு முன் கமல், ஒரு பதிவர் சந்திப்பு நடத்துதல் அவருக்கு நல்லது.  ;-)


சரி, நாம இப்போ பதிவுலகின் அடுத்த பரபரப்பிற்காக காத்திருப்போம்!