இன்று ஒரு குறள் !

சனி, ஜூன் 05, 2010

சபாஷ் சந்தன முல்லை !





எப்பொழுதாவது ஒருமுறை மட்டுமே பதிவுலகை எட்டிப்பார்ப்பதற்கு எனது வேலைப்பளு என்னை அனுமதிக்கிறது.
அப்படிஒரு இடைவேளைக்கு பின் வந்து பலரது இடுகைகளை படிக்கையில், தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இறுதியாக வினவு பதிவின் மூலம் நடந்ததை அறிய முடிந்தது.
கூடவே ஆணாதிக்க திமிர் அடங்கிய, ஆபாசமும் அருவருப்பும் மண்டிய, நாத்தம் புடிச்ச பூக்காரி புனைவை படிக்கவும் நேர்ந்த்தது. .



ஆணாதிக்க வெறி பிடித்த பதிவர் நர்சிம்மிற்கும், அருவறுப்பு புண்ணோட்ட மிட்ட கார்க்கிக்கும், கும்மியடித்து கொண்டாட்டம் போட்ட மற்றோருக்கும் எனது கடுமையான கண்டனங்கள்



பதிவர் சந்தனமுல்லைக்கு, உள்ள உறுதிக்கும், தெளிவான நோக்கிற்கும், தீர்வு நோக்கி போராடும் மனத்திண்மைக்கும் ஒரு ராயல் சல்யூட்!



HAT''S OFF TO YOU !



தனக்கு சம்பந்தமில்லாத விஷயமிது என்று தள்ளி நின்று பார்க்காமல் துணிந்து தோள் கொடுத்த வினவு தோழர்களுக்கு ஒரு வீர வணக்கம்!


இப்போது லேட்டஸ்டாக மருத்துவர் புருனோ, பாதிக்கப்பட்ட பதிவரை இன்னமும் ஆபாச வார்த்தைகளால் குதறியிருப்பது தெரிய வருகின்றது
அவருக்கும் எனது கடுமையான கண்டனங்கள்