இன்று ஒரு குறள் !

திங்கள், ஆகஸ்ட் 17, 2009

பெங்களூரிலும் சென்னையிலும் புதியதாய் திறக்கப்பட்ட காக்காய் கக்கூசுகள்




ஒரு வழியாக பண்ட மாற்று முறையிலும், பெண் கொடுத்து பெண் எடுக்கும் முறையிலும் பெங்களூருவில் அய்யன் திருவள்ளூவர் சிலையையும்  சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையையும் திறந்து வைத்து விட்டு மேடைகளில் கலைஞரும் எடியூரப்பாவும் ஒருவருக்கொருவர் சொறிந்து விட்டு கொண்டுள்ளனர்.

ஏதோ இதன் மூலம் காவேரி பிரச்சினை தீர்ந்தது போலவும், ஒக்கனேக்கல் பிரச்சினைக்கு ஒப்பந்தம் போட்டது போலவும்  இரு மாநில மக்களின் மனங்களை இணைத்து விட்டதாய் பரஸ்பர பாராட்டுக்கள்.

சரி,  நெடுங்கால பிரச்சினையான தண்ணீர் பிரச்சினை இப்படி நினைத்தவுடன் தீர்த்து விட முடியுமா? அதற்கு சின்ன, சின்னதாய் இது போன்ற  நிகழ்ச்சிகள் முன்னோட்டமாக இருக்காதா? இதனால் இரு மாநில மக்களின் மனங்களில் விஸ்வருபமெடுத்து இருக்கும் பகைமை கொஞ்சங்கொஞ்சமாக குறையாதா? என்று கேள்வி எழுவது உண்மைதான்.



நடந்தது என்ன

ஒரு தரப்பு பெருந்தன்மையோ அல்லது பரஸ்பர விட்டு கொடுத்தலோ இல்லை.
ஒரு வியாபாரம். நான் இதை தந்தால் எனக்கு நீ அதை தரவேண்டும் என்ற பச்சை வியாபாரம்.
வழக்கம் போல இந்த வியாபாரத்திலும் வெற்றியடைந்தது கர்நாடகம் தான்.



எப்படி

பெங்களூருவில் உள்ள தமிழ்சங்கம் வடிவமைத்து திறப்பிற்கு 18 ஆண்டு காலமாய் காத்துக் கொண்டிருந்த அய்யன் திருவள்ளூவர் சிலையை அங்கு திறக்க தமிழக அரசாங்கமே கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையை வடிவமைத்து திறக்க வேண்டும்.

எவ்வளவு அழகான அரசியல் இது.

இது புரிந்ததா இல்லையா என தெரிய வில்லை நம் அரசியல் சாணக்கியர் கலைஞருக்கு. இதில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் பற்றி கூறுகிறார்,  "கங்கையிலே குளித்தால் சொர்க்கம் செல்வோமென்றால், அதில் உள்ள தவளைகளும், மீன்களும் பாம்புகளும் சொர்க்கம் தானே செல்லும்" எனப் பொருள் வரும்படி பாட்டு எழுதியிருக்கிறாராம்.

ஆஹா என்ன ஒரு இலக்கிய ரசனை.

இது நம் வீடுகளில் உள்ள வாண்டுகள் கேட்கும் கேள்விதானே. இதை சொன்னவருக்கு சிலை என்றால் நம் ஊரில் சிலை வைக்க இடமே இருக்காதே.



அப்படியானால் கன்னட கவிஞர் சர்வக்ஞர், சிலை வைக்கும் அளவுக்கு பெரிய கவிஞர் இல்லையா?

அப்படி கருத இடமில்லை காரணம் ஒரு இனமே (கன்னடம்) அவரை தூக்கி வைத்து ஆடும்போது நிச்சயம்,அவரும் ஒரு பெரிய கவிஞராகத்தான் இருக்கணும். ஆனால் நமக்கு அவர் அறிமுகம் ஆகவில்லை.

அவரின் கருத்துகளும் கவிதைகளும் அறிமுகம் ஆவதற்கு முன்னமே சிலையை அறிமுகம் செய்து விட்டார்கள்.




சரி. இரு மாநில மக்களின் நல்லுறவுக்கு என்ன செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கர்னாடக அரசு, '18 ஆண்டு காலமாய் திறப்புக்காக காத்துக் கொண்டிருந்த' அய்யன் திருவள்ளூவர் சிலையை,  எந்த வித நிபந்தனையும் இல்லாமல் திறந்து வைத்திருக்க வேண்டும். அந்த மேடையிலே இரு மானில முதல்வர்களும் பங்கு பெற்றூ கலைஞர் எடியூரப்பாவை பாராட்டியிருந்தால் நிஜமான பாராட்டாய் இருந்திருக்கும்.

பின் சில மாதங்களிலோ அல்லது ஒன்றிரண்டு வருடங்களிலோ கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையை தமிழக அரசு, கர்னாடக அரசின் எந்த வித நிர்ப்பந்தமும் இல்லாமல் திறந்திருக்க வேண்டும். இதற்கிடையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் பற்றி தமிழக மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அவரின் கருத்துகளை பரப்பி யிருக்க வேண்டும்.

இப்படி செய்திருந்தால் இதுதான் இரு மாநில மக்களின் பரஸ்பர உறவுக்கு அர்த்தமாக இருந்திருக்கும்.



சரி, இனி என்னதான் நடக்கும்

பெங்களூரிலும் சென்னையிலும் உள்ள காக்கைகளுக்கு உச்சா போக கூடுதலாக இன்னொரு சிலை கிடைக்கும்



எப்போதும்போல.
 நீர் வரத்து கம்மியானால் தமிழகத்தை காய விடுவதும் , நீர் வரத்து அதிகமாகி வெள்ள அபாயம் ஏற்பட்டால் தமிழத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு நாசம் பண்ணுவதும் வழக்கம் போல நடக்கும்.


அதோடு இன்னொன்றும் வழக்கத்தை விட கூட நடக்கும்.

தமிழத்துடன் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் வழக்கம் போல தமிழக பஸ் கார் தாக்கப்படும் , அங்கு வசிக்கும் தமிழர்கள் தாக்கப்படுவார்கள் அத்துடன் கூட புதிதாக அய்யன் திருவள்ளூவர் சிலை கை கால்கள் தனித்தனியாக ஆபரேஷன் செய்யப்படும் அதற்கு வாட்டாள் நாகராஜ் போன்ற பிரபல 'வசூல் ராஜா' மருத்துவர்கள் தலைமையேற்பர்.


அப்படியென்றால், நடந்த சிலை திறப்பு விழாக்களினால் நன்மையே இல்லையா

இருக்கிறது கலைஞர் தனது பொது வாழ்க்கை சாதனை பட்டியலில் 18 மாத காலம் சிறைப்பட்டிருந்த திருவள்ளுவரை விடுவித்த சாதனை இடம்பெறும்



கலைஞர் மனதில் அடுத்து என்ன யோசனை ஓடும்.

கலைஞரின் மனம், பட்டியலின் அடுத்த சாதனைக்கு இப்படி யோசிக்குமோ என்னமோ !

தமிழர் தலைவரிடம் சொல்லி பெங்களூருவில் ஒரு பெரியார் சிலையை நிறுவ வேண்டும் பிறகு எடியூரப்பாவிடம் பேசி அதை திறந்து வைத்து விடலாம். இன்னொரு சாதனை படைத்ததாய் இருக்கும்.

ம் ..ம் .. என்ன எழவு, அதுக்கு ஒரு வாரம் கழித்து ராஜ்குமார் சிலையையோ அல்லது வாட்டாள் நாகராஜ் சிலையையோ தமிழக அரசு சார்பில் இங்கு திறக்கப்பட வேண்டியிருக்கும்.