இன்று ஒரு குறள் !

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

இப்போதாவது" விழித்திடு தமிழா !!! .... முல்லை பெரியாறு நமது "உரிமை பிரச்சனை'

 நண்பர் பதிவர் Raju Online  முல்லை பெரியாறு பிரச்சினையில்  மற்ற பிற மாநிலத்தவர் தமிழ் நாட்டை மோசமாக நினைக்கின்ற வகையில் கேரளம் திரிபுவாதம் செய்வதை விவரிக்கிறார். இதை தமிழ் நாடு சரிவர எதிர் கொள்ளவில்லை என வருந்துகிறார். இதில் நம் பங்குக்கு அவர் எண்ணங்களை் இன்னும் பலரை அடைய வேண்டும் என்ற நோக்கில் என் வலைப்பதிவில் அவர் அனுமதியுடன் பதிகிறேன்.

இனி அவரின் வார்த்தைகளில் :

முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில்
புயலைக் கிளப்பிவிட்டு தமிழ் நாட்டை
பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச
வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.
மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில்
கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் !

“116
வருட சுண்ணாம்பு அணை இன்னும்
எவ்வளவு நாள் தாங்கும் ?தங்கள் இடத்திலேயே -
தங்கள் செலவிலேயே -
புதிய அணையைக் கட்டி,தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக
கேரளா சொல்கிறதே ஒப்பந்தம் எழுதிக்
கொடுக்கிறோம் என்கிறார்களே.
இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ?இது என்ன வீண் பிடிவாதம் ?இது என்ன பைத்தியக்காரத்தனம் ?”இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது.
கேரளா இதுவரை செய்த அநியாயங்கள்,புதிய அணை கட்டி இனி செய்ய
உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் -
இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை.
ஏன் தமிழ் நாட்டிலேயே சென்னையிலேயே கூட,படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !
புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான்
அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே
என்று தமிழர்களே கேட்கிறார்கள்.
தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும்
தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை
தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான்
சொல்ல வேண்டும்.
இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.
புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும்
சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில்
எடுத்துச் சொல்ல வேண்டும்.
இந்த வலைத்தளத்தைப் படிப்பவர்களுக்காக -
நான் எனக்குத் தெரிந்ததை சுருக்கமாக
கீழே தருகிறேன்.
முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது
பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல்.
அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர்
சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக
கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின்
வரையரைக்குள் தான் இருந்தது)
எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன்
இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு
பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை
999
ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு
ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த
அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல்
கட்டி முடித்தனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இதில்
அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது
தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு
சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான்.
ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.
அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !
இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி.
இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் சுமார் 2,08,000 ஏக்கர்.
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய
4
மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள்
பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும்
இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.
இந்த அணை பறிக்கப்பட்டால் இத்தனை இடங்களும்
பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும்
பிழைப்பு பறிபோய் பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.
பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே,இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்
மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான்
ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.
பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே
15.66
டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை
தான் பயன்படுத்த முடியும்.
(104
அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)
ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது.
கொள்ளளவு 70 டிஎம்சி.
பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது
நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள்
பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம்
நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி
நிரம்பவே இல்லை.
அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் -
பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற
குரல் -கூக்குரல்.
சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.
அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம்
மக்கள் செத்துப் போவார்கள். எனவே
உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !
புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ?மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால்,நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக
இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.
சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !
அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு
தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே
என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.
அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம்.
பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து
2709
முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து
மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக
தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.
புதிய அணையை கட்டப்போவது 1853 அடி
உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து
தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது.
நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்
பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ
மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள -
மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி
வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.
அணையைக் கட்டிய பிறகு,இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத்
திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து
ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய
நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.
எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி
இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக
கிடைக்காது.
புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை -
புரிகிறது.
ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை -
எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.
35
லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே -
பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?அயோக்கியத்தனம்.
வடிகட்டிய அயோக்கியத்தனம்.
முதலாவதாக -
பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் -
மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து -
நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான்
வந்தடையும்.
பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும்
(10
டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு
உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய
போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.
வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி
இருந்தாலும் வெளியேறும் நீர் பெரியாறு
அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம்
ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து
தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !
எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்
என்கிற பேச்சே அபத்தமானது.
இரண்டாவதாக -

1976
ல் இடுக்கி அணையை கட்டினார்கள்.
1979
ல் பெரியாறு அணை உடையப்போகிறது
என்று குரல் எழுப்பினார்கள்.
பயத்தைக் கிளப்பினார்கள்.
சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.
2000
ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை
அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி
அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.
கேரளா சொல்வது போல்
இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.
ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல்
40
டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே
செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட்
உள் செலுத்தப்பட்டது.

2000
ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு -
நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி -
லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட்
கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக -
ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல்,கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட்
அணையே உருவாக்கப்பட்டு விட்டது.
கீழே உள்ள வரைபடத்தைப்
பார்த்தால் நன்றாகப் புரியும்.








இதன் பிறகு தான், 27/02/2006 அன்று,சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை
என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு -
156
அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம்
என்று அனுமதியே கொடுத்தது.
விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ?மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக,கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம்
இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி
விட்டார்கள்.
வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.
மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.
இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின்
பரிசீலனையில் இருக்கும்போதே -
தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக
இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம்
ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை
கட்ட வேண்டும் என்று.
பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள்.
பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
பந்த் நடத்துகிறார்கள்.
இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக்
கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம்
இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.
தமிழ் நாடு ஏமாந்தது போதும்.


http://rajuinfotech.blogspot.com/2011/12/kolaveri-song-promote-please.html


திங்கள், பிப்ரவரி 06, 2012

அம்மாவிற்கு வந்த கோபம் - அரசியல் விமர்சகர் சோமாஸ் பேட்டி

சட்டசபையில் நடந்த முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்  மோதலை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் 10  நாட்கள் சட்டசபை கூட்டத்தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் நாம் அறிந்ததே.

இதைப்பற்றி பிரபல அரசியல் விமர்சகர் சோமாஸ் என்கின்ற சோமசுந்தரத்தை சந்தித்து அவரின் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள நேரம் வாங்கி அவரி்ன் இல்லம் சென்றோம்.

அவரின் அலுவலக அறையில் சிறிது நேர காத்திரு்ப்புக்கு பி்ன்,
 
"அத்வானி அத்வானி... தலைக்கு கீழே வச்சிக்கோ தலவானி தலவானி.. அப்படியும் பொழுது உனக்கு போகலைன்னா யூடூயூபில பார்த்துக்க மொத்வானி ஹன்ஸிகா மொத்வானி ஆஹா ஹன்ஸிகா மொத்வானி...."  என்று ஒரு பாடலை முணு முணுத்தபடியே வந்து சேர்ந்தார் .

வந்ததும் நேராக எங்களிடம், "முக்கியமான கேள்விகள் மட்டும் கேளுங்க   தனி தனியாய் பல  கேக்காதீங்க 'ஐ அம் வெரி பிஸி.'

இப்பக்கூட குஜராத்திலிருந்து ஒரு முக்கியமான காலுக்கு 'ஐ அம் வெய்ட்டிங்' இருந்தாலும் உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திட்டதால   தான் இங்கே வந்தேன. கேளுங்கள் 'குவீக் குவீக்'"   என்று   அவசரப்படுத்தினார்.



உடனே நாமும்,

சட்டசபையில் முதல்வர் "அதிமுக வினால்தான் கூட்டணி கட்சிகள் வென்றன  என்று கூறுகிறார்  ஆனால் எதிர்கட்சி தலைவர் ஊர் கூடி தானே தேர் இழுத்தோம். அதனால் இந்த வெற்றியில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது என்று பதிலுக்கு சொல்கிறார். அப்படி சொல்றதும்  நியாயமாக தானே இருக்கிறது. இதில உங்க கருத்து?

ஆமா உண்மைதான்! ஊர் கூடித்தான்யா தேரை இழுத்தோம். தேர்தான் நிலைக்கு வந்திடிச்சில்ல  அதோடு போக வேண்டியது தானே. அத உட்டுபுட்டு  தானும் அந்த தேரில் ஏறனும்னா என்ன அர்த்தம்.

இப்ப ராமாயணத்திலே எடுத்திக்கிட்டீங்கன்னா, ராமபிரான் தனியாவா போய் ராவணன் கிட்ட சண்டை போட்டாரு? அனுமான் தலைமையில் குரங்கு படையோடதானே போனாரு.

இன்னும் கூட சீதை் இருந்த இடத்தை கண்டுபிடிச்சது, சீதைக்கு தைரியம் சொன்னது, இலங்கையில் முதல் கலவரத்தை ஆரம்பிச்சது எல்லாமே அனுமான் தான். அதுக்காக தானே ராமர் தன்னை அனுமான் நெஞ்சில் சுமக்கிற பாக்கியம் தந்தார். அனுமானை தூக்கி ராமன் தன் நெஞ்சில் சுமக்கலியே.

அதே போல இவர் எதிர்கட்சி தலைவராய் முதல்வருக்கு மிக அருகாய் எதிரில் அமர்ந்திருக்கிறார். முதல்வருக்கு நிறைய முறை வந்தனம் செய்யும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. அதை , நினைத்து பெருமை படுவதை விட்டு விட்டு தனக்கு மரியாதை தரவேண்டும் என எதிர்பார்ப்பது சரியான அபத்தம் இல்லையா.. அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேண்டாமோ?



கேள்வி : தகுதி வேணும்னு நீங்களும் சொல்கிறீர்கள். தகுதி இல்லாதவர் என்றும் பார்க்க அருவருப்பா இருக்குதுன்னும் முதல்வரும் கோபமா சொல்றார். அந்த தகுதி என்னன்னு ........

முதல்வருக்கு கோபம் வராம வேற என்ன செய்யும்

பெரிய பதவிக்கு வர கீழ்கண்ட தகுதிகளில் ஒன்றாவது இருக்கணும்லே

ஒண்ணு அவாளாக இருக்க வேணும்

இல்லை

அட்லீஸ்ட் செவப்பு தோலாவாது இருக்கணும்

அதுவும் இல்லன்னா

அரைகுறை ஆடையில வந்து ஒடம்பையாவது காட்டி  நடிச்சி இருக்கணும்

அட அது கூட இல்லன்னா

அடுத்தவன் குடும்பத்திலயாவது உள்ள புகுந்து கொழப்பி, அவுங்க தாம்பத்யத்தையே ஆட்டையை போட்டு இருக்கணும்

இப்படி எதுவுமே இல்லாம எதிர்கட்சி தலைவரா வந்து எதிரில் உக்காந்தா முதல்வருக்கு கோபம் வருமா வராதா

அதுவுமில்லாம முதல்வர் இதுவரை தனக்கு முன்னாடி கை கட்டி நிக்கிற ஆம்பிளையைதான் பார்த்திருக்காங்க இந்த ஆளு என்னானா கை நீட்டியில்ல பேசுறாரு

நீட்டின விரலை ஒடைச்சி போடுறது தான் அவருக்கு கொடுக்கிற சரியான தண்டனைன்னு சொல்லாம போனதே அவரோட பெருந்தன்மையை தான் காட்டுது

அவுங்க மட்டும் அப்படி சொல்லியிருந்தா சட்டமன்ற உரிமை மீறல் குழு அதை அப்படியே தன்னுடைய தீர்ப்பால சொல்லியிருக்கும்

அப்புறம் வெரலு இல்லாம அவர பார்க்க அம்மாவுக்கு இன்னமுமில்ல அருவெருப்பா இருக்கும்

இல்ல என்ன இருந்தாலும் ....

சரி உங்களுக்கு கொடுத்த நேரம் முடிஞ்சுடுத்து, நீங்க போகலாம் என்று சர்ரென்று கிளம்பி போனார்.

நாமும், அவரை  பேட்டி கண்ட மகிழ்ச்சியிலும். அவரை நேரில் பார்த்த பாக்கியம் கிடைத்ததால்  எங்கள் தகுதி எந்த அளவில் உள்ளது என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டபடியும்  அலுவலகம் திரும்பினோம்.









பின் குறிப்பு : இது முழுக்க முழுக்க கற்பனையே. கடந்த 01/02/2012 அன்று சட்டசபையில் நடந்த நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறேன்

சனி, பிப்ரவரி 04, 2012

தன்னிகரற்ற ஜெயா மாமியும் தகுதியற்ற சின்ன கவுண்டரும் என் எண்ணங்களும்



எதிர்கட்சியாக விஜயகாந்தின் தேமுதிக சரியாக செயல்படவில்லை என அனைவரும் சொல்லிக்கொண்டிருக்க அதை தவறு என்று சட்டசபையில் ஆளுங்கட்சிக்கு சரியான எதிர்கட்சியாய்  தன் கட்சியை காட்ட முயற்சித்து  எதிரி கட்சியாய் ஆக்கி விட்டுருக்கிறார் அதன் தலைவர் விஜயகாந்த்.

தொலைக்காட்சிகளிலும் , யூ ட்யூபிலும் ஒரு விறுவிறுப்பான திரைப்படம் போல சட்டசபை காட்சிகள் காட்ட்ப்படுகிறது. அதை நன்கு கவனிப்பவர்களுக்கு ஒரு உண்மை புரிந்திருக்கும் இச்சம்பவத்தின் முழு்மைக்கும் விஜயகாந்த் மட்டுமே பொறுப்பு அல்ல என்று.

தன் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் பேச,  அதில்  ஆளுங்கட்சியினர்  குறுக்கிட்டுக் கொண்டே  இருக்க, அதனால் தானே எழுந்து பதில் பேச, ஜெயலலிதா எழுந்து அதை மறுத்து பேச, பிறகு இருவருக்கும் நேரடியாக  விவாதம் எழ,  சவால்களை இரு தரப்பும் பறிமாறிக்கொள்ள, பிறகு சபாநாயகர் தலையிட்டு அமைதி படுத்தி அனைவரையும் அமர வைக்கிறார். (இதுவரைக்கும் நல்லாதானேய்யா போய்ட்டிருந்தது)


பின் சில வினாடிகளில் விஜயகாந்த் திடீரென தனது சீட்டிலிருந்து வேகமாக எழுகிறார்.  படு ஆவேசமாக ஆளுங்கட்சித் தரப்பைப் பார்த்து  நாக்கை மடித்து கையை உயர்த்தி ஏதோ பேசுகிறார். அவரது கண்களில் கோபம் கொப்புளிக்கிறது.

இந்த காட்சியை பார்த்து விஜயகாந்த் தான் 'நிதானம்' இல்லாமல், சட்டசபை கண்ணியம் கருதாமல், எதிர்கட்சித் தலைவருக்குரிய  தகுதியை அறியாமல், மன நிலை பிறழ்ந்தவன் போல நடந்து கொண்டார் என கருதுவீர்களானால் நிச்சயம் நீங்கள் அம்புலிமாமா வை மட்டுமே படித்து புரிந்து கொள்ளும் மன நிலையிலேயே இன்னமும் இருக்கின்றீர்கள் என்று தான் அர்த்தம்.

விஜயகாந்த் ஆவேசமாய் எழுந்ததற்கு காரணமாய் ஆளுங்கட்சி பகுதியில் என்ன செய்தார்கள் என்பதை காட்டாமல் மறைத்து விட்டார்கள். நியாயம் தானே, இது அவர்கள் படமாயிற்றே. தயாரிப்பும் டைரக்‌ஷனும் அவர்களேதானே.

அவர்கள் அனைவரையும் கூண்டோடு வெளியேற்றிய பின் பேசிய ஜெயலலிதா 'வெட்கப்பட்டிருகிறார்' (அட நம்புக்கப்பா அவருக்கும் அதெல்லாம் வரும்)

தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக தான் வெட்கப்படுவதாக அவரே கூறியிருக்கிறார் (வேற எதுக்காவோன்னு் நீங்க வேற எதையாவது ஒண்ண நினைச்சா அது உங்க தப்பு)

பிறகு விஜயகாந்துக்கு என்ன தண்டனை தர வேண்டும் என்று சபாநாயகருக்கு கோடிட்டு காட்டுகிறார்.

அடுத்து விஜயகாந்தின் தகுதி பற்றி பேசியிருக்கிறார். எப்படியென்றால், தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்துவிட்டால் இப்படித்தான் நடந்துகொள்வார்களாம்.

(எந்தவித முகாந்திரமும் இல்லாத, பொய்யாக முனையப்பட்ட ஒரு வழக்கை காட்டி எதிர்கட்சி தலைவரை வயதானவர் என்று கூட பார்க்காமல் நள்ளிரவில் அராஜகமாக கைது செய்தது  பற்றி உங்களுக்கு நினைப்பு வந்தால் அது ஜெவின் தவறு அல்ல)



அதிமுக வை எப்படியும் ஆட்சியிலே உட்கார வச்சே தீரணும்னு மக்கள் தீர்மானிச்சி வாக்களித்தபோது இவர்களும் வந்து ஓட்டிக்கொண்டதாலே சட்டசபைக்குள் இவர்களால் வர முடிந்தது என்றும் பேசியிருக்கிறார்

இதில் புரியாத விஷயம் என்னவென்றால், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கிடைத்த வெற்றிக்கு யாராவது ஒரு தனி மனிதர் உரிமை கோர முடியுமா அப்படியே ஒரு கட்சி தான் கோரமுடியும் என்று வைத்துக் கொண்டாலும் கூட  அந்த தகுதி திமுகவிற்கு தவிர வேற எதற்குமில்லை.

ஏனெனில் மக்கள் திமுக ஆட்சி போக வேண்டும் என்று எதிர்பார்த்தார்களே அன்றி அதிமுகவே ஆட்சிக்கு வரவேண்டும் என ஏங்கி கிடக்கவில்லை. என்ன செய்வது  நமக்கு தான் அதை விட்டா இது, இதை விட்டா அது  என்பதை தவிர வேற தேர்வு எதுவுமே இல்லையே.

அடுத்து இவர் தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்துவிட்டால் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என  விஜயகாந்தை பற்றி கூறியிருக்கிறார்

அதுசரி... எதை இவர் தகுதி என்கிறார்???
எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னால் அதிமுகவின் தலைவியாக ஜெயலலிதா வந்தவுடன் கலைஞரும் இதை தான் வேறு மாதிரியாக சொன்னார், நான் பெரிய பெரிய தலைவர்களுடன் அரசியல் செய்திருக்கிறேன் என் நிலைமை இவ்ரோடு எல்லாம் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது என்று.

அதை அப்போது ஜெயலலிதா ஒத்துக்கொண்டு அரசியலை விட்டே விலகி விட்டாரா. தான் வளர்ந்த பிறகு புதியவர்களை பார்த்து இப்படி சொல்லி சிறுமைப்படுத்துவதே அரசியல்வாதிகளின் வேலையாக போய்விட்டது

ஒருவரின் தகுதியை தீர்மானிப்பது யார் இவர்களா இல்லை மக்களா???

ஆனால் ஒண்ணு அம்மாவைப் பார்த்து  திமுகவினர் உட்பட எ்ல்லோருமே  பம்மிக்கிட்டு போகும் போது  விஜயகாந்த் தைரியமாய் பல பேருக்கு எதிரிலேயே அம்மாவுக்கு சவாலுக்கு சவால் விட்டு எகிறுனாரே அதுவே ஒரு தகுதி தான்.

கேப்டன் உங்க வீரம் எனக்கு புடிச்சிருக்கு.