இன்று ஒரு குறள் !

ஞாயிறு, மார்ச் 30, 2008

ஜெயமோகன் செய்தது சரியில்லைதான்.

நீண்ட நாட்களாகவே இந்த பதிவு போட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்று தான் முடிந்தது.

காரணங்கள் பல, அவற்றில் சில.

முதல் காரணம் அனைவருக்கும் உள்ள காரணம் நேரமின்மை.

அடுத்து ப்ளாக் எழுத தயக்கம், தடுமாற்றம், நம்மால் முடியுமா என்ற பயம்.

சரி துணிந்து எழுதிடலாம் என நினைத்து ஜி- மெயிலில் அக்கவுண்ட் திறந்து ப்ளாக் உருவாக்கி அறிமுக பதிவு எழுதி (எல்லாம் முறையா செய்யனும்ல),
அடுத்த நாள் அவசரமாக ப்ளாக் திறந்து இந்த பதிவு எழுத அமர்ந்தபோதுதான் அடுத்த அடி!

ஜி-மெயில் என்னுடைய ப்ளாக்கை spyware என சந்தேகப்பட்டு தடை செய்திருந்தது. அட கஷ்ட காலமே என நினைத்து ஜி மெயிலுக்கு ஒரு தடை நீக்க கோரிக்கை எழுதிவிட்டு காத்திருந்தேன், காத்திருந்தேன், 10 நாளா காத்திருந்தேன் பயன்தான் இல்லை.

சரி ப்ளாக்கர் இல்லையென்றால் wordpress-இல் ப்ளாக் திறந்து எழுதிடலாமென்று ஒன்று திறந்து விட்டு, வழக்கம்போல ஒரு அறிமுக பதிவும் எழுதி விட்டு, இந்த பதிவை எழுதிடலாம் என்றால் மீண்டும் ஒரு தயக்கம்.

இந்த தடவை, ஒரு மூத்தபதிவரின் ஒரு பதிவை ஒரு குழந்தைபதிவரான நான் (வார்த்தை சரிதானுங்களே), தவறென்று சொல்லி பதிவு போடுவது முறையோ என்றும், அவர் அந்த பதிவு எழுதி பல நாட்களாக ஆனது மட்டுமல்லாமலும் அதற்கு மறுப்பு மற்றும் ஆதரவு என பதிவர் உலகம் பாய்ந்து, பாய்ந்து எழுதி முடித்த விட்ட ஒரு நிலையில், இப்போது போய் அந்த பதிவைப்பற்றி ஒரு கருத்தை எப்படி எழுதுவது எனத்தயக்கம், அது மட்டுமின்றி wordpress ஏனோ என் மனதிற்கு பிடிக்கவில்லை. BLOGGER தான் வேண்டுமென மனம் அடம் பிடித்தது.

அதனால் அப்படியே ஆறப்போட்டு, என் ப்ளாக்கர் அக்கவுண்ட் தடை நீக்கத்திற்காக காத்திருந்தேன்.

இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருக்க, இன்று காலை எழுந்து காபிகுடித்து செய்தி படிக்கையில் பளிச்சென்று ஒரு செய்தி என் மூஞ்சியிலறைந்தது. அது கனிமொழி ஜெயமோகனை கண்டித்த செய்தியே!

அப்படினா அந்த பதிவு இன்னும் பழசாகலே.
இப்பவும் நம்ம எதிர்வினை தயங்காம வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டு யோசிக்கையில் திடீரென்று ஒரு பொறி தட்டியது.

பல மாதங்களுக்கு முன்னாலே ஆர்வ மிகுதியால் ஒரு ஜி-மெயில் ப்ளாக் திறந்து அப்புறம் ஒன்றுமே எழுதாமல் விட்டது நினைவு வந்தது.

சரியென்று அதில் உள் நுழைந்து பதிவு இடலாமென்றால், பாஸ் வேர்ட் மறந்து விட்டது. உடனே ஜி-மெயிலுக்கு மெயில் எழுதி, புது பாஸ் வேர்ட் வாங்கி ................ அப்பப்பா மூச்சு இரைக்குது!


அது சரி, இன்னும் என்ன வேணும் உங்களுக்கு?

அடடே, இன்னும் பதிவோட மேட்டருக்கே நான் வரலியா, சரி சரி பல்லை கடிக்காதீங்க, சொல்ல வந்ததை சொல்லிடுறேன்.
ஆனா ஒரு ரெக்வெஸ்ட், இந்த பதிவுலே என்னாலே முடியாது ஏற்கெனவே தாவு தீர்ந்திடிச்சி!

அடுத்த பதிவை பாருங்க ப்ளீஸ்...!!