இன்று ஒரு குறள் !

ஞாயிறு, ஜனவரி 10, 2010

நாளைய செய்திகள் - சுறா படம் இணையத்தில் வெளியாகியது

சுறா படம் இணையத்தில் வெளியாகியது - கோடம்பாக்கம் அதிர்ந்தது



இளைய தளபதி விஜயின் 50 வது படமாக சங்கிலி முருகன் தயாரிப்பில் உருவாகி, பின் சன் பிக்சர்ஸின் படமான சுறாவின் படப்பிடிப்பு இறுதி கட்ட நிலையில் உள்ளது யாவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இன்று இணைய தளங்களில் முழு படமும் வெளியாகி கோலிவுட்டை அதிர வைத்தது.

இணையத்தில் சுறா படம் வெளியானது பற்றி அந்த படத்தின் தயாரிப்பாளர் முதல்வரிடம் முறையிட்டார்.

முதல்வரின் உத்தரவின்பேரில், டிவிடி விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
படம், பாடல்கள் இசை எடிட்டிங் என்று ஏறக்குறைய எல்லாமே முடிவடைந்து விட்டாலும் விஜய் சொல்ல வேண்டிய 'டேஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்' என்ற ஒற்றை சொல் நீண்ட வசனம் படத்தில் சேர்க்க வேண்டியிருப்பதால் இன்னும் 1 மாதம் கழித்துதான் ரிலீஸ் செய்வதாக இருந்தோம். அதற்கிடையில் இணையத்தில் வெளியாகி விட்டதே என்று அந்த படத்தின் இயக்குனர் நிருபர்களிடம் மிகவும் வருத்தமாக கூறினார்.

சுறா படம் இணையத்தில் திருட்டு விசிடி- திரைத்துறையினர் கண்டனக்கூட்டம்

சுறா படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து அந்த படத்தின் தயாரிப்பாளர்களின் அழைப்பின் பேரில் திரைப்படத்துறையினர் பங்கு கொண்ட கண்டனக்கூட்டத்தில்

திரு எஸ்.ஏ.எஸ், படத்தின் காப்பி இணையத்தில் வெளியானதுமே தம்பி விஜய்க்கு அறிவித்து விட்டு உடனே முதல்வருக்கும் தெரிவித்து விட்டேன், "உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் இதைவிட எனக்கு என்ன முக்கிய வேலை" என்று கூறி உடனடி நடவடிக்கைக்கு உத்தரவு இட்ட முதல்வருக்கு நன்றி என்று பேசினார்


டைரக்டர் சேரன் :



“நடிகர்கள் மாவட்டம் தோறும் தங்கள் ரசிகர்களில் நூறு பேரை தேர்ந்தெடுத்து, அவர்களை படிப்பு, தொழில், பிழைப்பு என்று எதையும் செய்யவிடாமல், மாதம் மாதம் கொஞ்சம் பணம் கொடுத்து, திருட்டு விசிடியை ஒழிப்பதற்கென்றே நியமிக்க வேண்டும்.

அவுங்க எல்லாரும் சேர்ந்து திருட்டு விசிடி எடுக்கிறவங்களை அருவாளை எடுத்திட்டு போயி வெட்டணும்.

இணைய தொடர்பு உள்ள கணிணி வச்சியிருந்தாலே அடிச்சி நொறுக்கணும்.

இண்டர்நெட்னு சொல்றவன் பல்லையெல்லாம் ஒடைக்கணும்


'மக்கள நாம நடிச்சி கொல்லணும் அவனுங்க அடிச்சி கொல்லணும்'

இப்படி செஞ்சாலே திருட்டு விசிடி தொல்லை ஒழிஞ்சி நாம நிம்மதியா இருக்கலாம்" என்றார்.

கமலஹாஸன் பேசியதாவது :

"நான் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்தபோது இதே போன்ற அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. அன்றைய முதல்வர் காமராஜரிடம் போய் அழுதுகொண்டே சொன்னேன். அவனை உள்ளே பிடித்துப்போட்டார். அடுத்த நாளே அந்த திருடன் வெளியே வந்துவிட்டான். உண்மையிலேயே வி.சி.டி. திருடர்களை திருத்த முடியாது.

திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் எல்லாம் அல்கொய்தாவின் நேரடி வங்கி கணக்கிற்கு போகிறது அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதையெல்லாம் நாம் அமெரிக்காவுக்கு, சிஐஏ வுக்கு எடுத்து சொல்ல வேண்டும். திருட்டு வி.சி.டி. பணம் எல்லாம் தேச துரோகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்களுக்கு புரியவைக்க வேண்டும்" என்று கமல் கூறினார்


ரஜினி பேசியதாவது :

சுறா படம் முதலில் நான் நடிப்பதாக இருந்தது. `REQUIN' என்ற பிரெஞ்சு படத்தின் சி.டி.யை இயக்குனர் கொண்டுவந்து கொடுத்தார். சுறா என்ற டைட்டில் கொடுத்து பார்த்தபோது, பிரமாதமாக இருந்தது.

சுறா... எறா... புறா... என்று பத்து பதினைந்து பஞ்ச் டயலாக் அள்ளி உடலாம். இயக்குனரும் சொன்னார், நீங்க பஞ்ச் டயலாக் சீன்களில் மட்டும் நடிச்சி கொடுங்க. மத்த சீன்களிலெல்லாம் கிராபிக்ஸ் மூலம் உங்க தலையை கிராபிக்ஸில் ஒட்ட வச்சிடலாம், படம் நீங்க நடிச்ச மாதிரியே வந்திடும்னு.

நானும் ஒத்துக்கிட்டேன். ஆனா படத்தில என் தலையை சரியா ஒட்டவைக்க முடியலை, பொருந்தலை. ஏதோ ஒன்று தடுக்கிறது என்று வேண்டாம் என விட்டுவிட்டேன்.

நீண்டநாட்கள் கழித்து விஜய்யை வைத்து, சுறா படத்தை எடுக்கப்போவதாக இயக்குனர் சொன்னார். எனக்குத்தான் அந்த படம் ஆகவில்லை. விஜய்க்கு சரியாக இருக்கும் என்று கருதினேன். ஏன்னா பீல்டுலே எனக்கு அப்புறம் அதிகமா வலிக்காம பஞ்ச் வசனம் பேசுறது விஜய்ங்கிறதால ஒத்து வரும்ணு நினைச்சேன்.

சன் பிக்ஸர்ஸிடம் போய் மாட்டிக்கொண்டதால் விஜயும், விஜயை வைத்து எடுத்ததற்காக இயக்குனரும் கவலைப்பட வேண்டாம்.
நிச்சயமாக படம் ஓடும் இல்லாவிட்டால் சன் டிவியால் ஓட வைக்கப்படும். படம் ரிலீஸான 2ம் நாளே விஜய் தன் தந்தையை அழைச்சிட்டு போய் கலாநிதி மாறனுக்கு சால்வை போர்த்தி நன்றி சொல்லலாம் என்று ரஜினி பேசினார்

திருட்டு விசிடி சட்டம் கடுமையாக்கினார் முதல்வர்

திரைப்படங்களில் ஒளி நாடா மற்றும் சிடிக்களை திருட்டுத்தனமாக தயாரிப்பாளர் வைத்திருப்பவர் விற்பவர், , அந்த ஏரியாவில் குடியிருப்பவர், பொட்டிக்கடை வைத்திருப்பவர், பிச்சை எடுப்பவர் அனைவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சட்டத்தின்படி குறைந்தபட்சம் ஆறு வருட சிறை தண்டனை கிடைக்க அரசின் சார்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே சமயம் வெளி நாட்டு படங்களைத் திருடி தமிழ்படம் எடுக்கும் திரைப்படத்துறையினருக்கு வழக்கம்போல் கேளிக்கை வரி ரத்து செய்வதோடு விருதுகளுக்கு பரிந்துரைக்கும்போது சிறப்பு சலுகையாய் முன்னுரிமை கொடுக்க கவனத்தில் கொள்ளப்படும்

இந்த சட்டப்பிரிவுகளை மேலும் தீவிரமாக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை அனுப்பும்.

திருட்டு விசிடியை ஒழித்த முதல்வருக்கு திரையுலகம் பாராட்டு விழா!

இன்று திரைப்படத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திரையுலகம் செழிப்படையவும் திரையுலகை திருட்டு வி.சி.டி. மூலம் சுரண்டி வாழ்ந்து கொண்டிருந்த கும்பலை கூண்டோடு ஒழிக்கும் விதமாக திருட்டு வி.சி.டி. தயாரிப்பவர்களையும், வைத்திருப்பவர்களையும் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கவும் சட்டம் இயற்றி திரையுலகை வாழ வைத்திருக்கிறார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இன்று தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா எடுக்கப்பட்டது. தமிழ் திரையுலகில் உள்ள அனைத்து நடிகர், நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் மற்றும் ஏனைய பிரிவினரும் கலந்து கொண்டு முதல்வரை வாயார வானுயர புகழ்ந்து தள்ளி, ஆளுக்கொரு பட்டம் கொடுத்துச்சென்றனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் 'திருட்டு விசிடி வென்ற திருக்குவளையார்' என்ற விருது அனைத்து திரைப்படத்துறையினர்களின் சார்பில் முதல்வருக்கு வழங்கப்பட்டது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



டிஸ்கி: இது ச்ச்சும்மா ஒரு தமாஷுக்கு. யாரையும் புண்படுத்த அல்ல.
ஆனாலும் உணர்ச்சிவசப்படும் விஜய் கமல் ரஜினி சேரன் சன் ரசிகர்களுக்கும், கலைஞரின் தொண்டர்களுக்கும் சொல்லி கொள்ள விரும்புவது COOL......

சனி, ஜனவரி 02, 2010

2010 - ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாசகர்கள் (ஏம்பா, நிஜமாவே அப்படி யாராச்சும் இருக்கீங்க), பதிவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய, இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.














டிஸ்கி : ஸ்..ஸ். அப்பாடா ஒரு வழியா பதிவு கணக்கில ஒண்ணை கூட்டியாச்சு