இன்று ஒரு குறள் !

திங்கள், அக்டோபர் 13, 2008

இவர்களுக்கு அவர்களை புரிந்தே இருக்கிறது !

இரண்டு நாள் week end விடுமுறையில் இந்த முறையாவது முடித்திருத்தம் செய்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.

இது ஒரு உலகமகா விஷயமின்னு இதற்கொரு தீர்மானம் என்று பல்லை நற நறப்பவர்களுக்கு, ‘ஐயா நாங்கள் இங்கு உள்ளூரில் உள்ள வெள்ளைக்காரர்களிடம் முடித்திருத்தம் செய்துக்கொள்ள மாட்டோம். சில பல கிலோ மீட்டர் தூரத்தில் கடை வைத்திருக்கும் தமிழர்களிடம் தான் செய்து கொள்வோம் (இனப்பற்று?).

அதற்கு போய் வர காத்திருக்க என அரை நாள் விடுமுறை அம்பேல் ஆகிவிடும். இதனால் கடந்த மூன்று வாரங்களாக போக வேண்டும் என் நினைத்து நினைத்து முடியாமல் போய்விட்டது அதற்காகதான் இந்த தீர்மானம். இப்ப ஓகே வா ! ஹி.. ஹி..’

தீர்மானித்த மாதிரியே காலையில் கிளம்பி விட்டேன். அப்புறமென்று தள்ளிப்போட்டால் வேற வேலை வந்து இந்த வாரமும் போக முடியாமல் போய்விடும்.
ஏற்கனவே பணியிடத்தில் முடியை விலக்கிட்டு மூஞ்சை தேடுறானுங்க.

கடையில் கொஞ்சம்தான் கூட்டம். அங்கு பணிபுரியும் ஐந்து பேரில் ஒருவர் மட்டும் ஃப்ரீ. நான் வழக்கமாக மண்டையை கொடுப்பவரிடம் மூன்று பேர் வெயிட்டிங். நான் நான்காவது.

கடை உரிமையாளர், வேலை செய்யும் நான்கு பேர், மற்றும் வந்து போகும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் அனைவரும் இலங்கையை சார்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் (ஈழத்தமிழர்கள்?).

சில மணித்துளிகளுக்கு பிறகு, என்னுடைய முறை வந்ததும், வாடிக்கையாக வெட்டுபவரின் முன் அமர்ந்து என் தலையை ஒப்படைத்தேன். வழக்கம்போல் என் தலையில் கை வண்ணம் காட்டியபடியே என்னுடன் உரையாட ஆரம்பித்தார்.

உரையாடல், வேலை, வெயில், சீஸன், சினிமா என்று எங்கெங்கோ தொடர்ந்து பின் நின்றது .

சிறிது நேர நிசப்தத்திற்கு பிறகு, “இந்தியாவில் ஏதுனும் விசேடமோ?” என்று வினவினார்.

எனக்கொன்றும் புரியவில்லை.

“என்ன கேட்டிங்க?” இது நான்.

பக்கத்தில் முடி வெட்டிக்கொள்ள வந்த இன்னொரு இளைஞன், “இல்லே அண்ணை, இந்தியாவில் எலெக்க்ஷன் ஏதும் வருதோ எண்டு கேட்டவர்” என்று விளக்கினார்.

அதற்கு நானும், “ ஆமாம்! இன்னும் சில மாதங்களில் பார்லிமெண்டுக்கு எலெக்‌ஷன் வருகிறது” என்றேன்.

உடனே அனைவரும் அர்த்தப்புஷ்டியோடு ஒருவ‌ருக்கொருவ‌ர் பார்த்து சிரித்துக் கொண்ட‌ன‌ர். எனக்கொன்றும் புரியவில்லை ‘எதற்கு அனைவரும் இப்படி நக்கலாக சிரிக்க வேண்டும்? ’

என் முழிப்பை பார்த்து விட்டு கடை உரிமையாளர் சொன்னார், “ஒண்றுமில்லை, தமிழ் நாட்டில் திடீரென்று எல்லா அரசியல் கட்சிகளும் இலங்கைத் தமிழரைப் பத்தி பேசுதே, அதற்கு என்ன காரணமென்று இதுவ‌ரைக்கும் புரியாம‌ல் இருந்தது, அதுதான் ” என்றார்.

நானும் அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு வெளியேறினேன்.

ஆக நம் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு கண்டு ஏமாறும் தமிழ் நாட்டு மக்கள் போல் இல்லை.

இவர்களுக்கு அவர்களை புரிந்தே இருக்கிறது !

புதன், அக்டோபர் 01, 2008

லொள்ளு பாண்டி



புதிய கட்சி தலைவர் சிரஞ்சீவி :
அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் விவகாரங்களில் அவர் தலையிடக் கூடாது.


லொள்ளு பாண்டி :
நியாயந்தானே ! அவருக்கு பொழுது போகலேனா சரோஜா படத்துக்கு விமர்சனம் எழுத சொல்லுங்கோ.
அதை வீட்டுபுட்டு அரசியல் பேசிக்கிட்டு...?

அதையெல்லாம் பேசத்தானே சினிமாகாரங்க, நீங்க இருக்கீங்க!!!



தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது :
இதுவரை தி.மு.க. சார்பில் முஸ்லீம்களுக்கு கருணாநிதி இப்தார் விருந்து கொடுத்ததுண்டா ?


லொள்ளு பாண்டி :
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க?
அவர் இப்தார் விருந்து வேணா கொடுக்காம இருந்திருக்கலாம்.
ஆனா முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்கள் எல்லோருக்குமே அப்பப்ப அல்வா கொடுத்திருக்காரே !




இப்தார் விருந்தில் விஜயகாந்த் :
என் மகனுக்கு இஸ்லாமியப் பெயர் சூட்டலாம் என்று ஆசைப்பட்டேன். பிரச்சினை வரும் என்பதற்காக அதைத் தவிர்த்தேன்.

லொள்ளு பாண்டி :
பிரச்சினை யாரு கிட்டேயிருந்து ?  பொண்டாட்டி, மச்சினன் கிட்டேயிருந்தா ???

அதை விடுங்க, உங்க இன்னொரு மகனுக்கு கிறிஸ்துவப் பெயர் சூட்ட ஆசைப்பட்டீங்களே அதை மறந்திடாதீங்க . இன்னும் ரெண்டு மாசத்திலே கிறிஸ்துமஸ் விருந்திலே சொல்ல வேண்டியிருக்கும்.

இந்திய கம்யூ. தா. பாண்டியன் :
கடுமையான ‘பொடா’ வேண்டாம். ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் சட்டங்களைத் துணிச்சலுடன் செயல்படுத்தினாலே போதும்.

லொள்ளு பாண்டி : 
கடுமையான ,சட்டம் தேவையில்லை சட்டங்களைத் துணிச்சலா செயல் படுத்த கடுமையான அரசு வேணும்னு சொல்றீங்க, சரியா?

அப்ப இவ்வளவு நாளு ஒரு ’சோப்லாங்கி’ அரசுக்கா ஆதரவு கொடுத்தீங்க!!!!!!


முதல்வர் கருணாநிதி :
ஒரு ரூபாய்க்கு அரிசி, ரு 50க்கு மளிகைப் பொருட்கள் தருவதை விமர்சிக்கும் கட்சிகள், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டங்களை நிறுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் சொல்லத் தயாரா?

லொள்ளு பாண்டி :
அதானே! சரியான கேள்வி கேட்டீங்க !
எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் கொண்டு வந்தப்ப ‘வருங்கால பிச்சைக்காரர்களை உருவாக்கம் செய்யும் திட்டம்’ னு விமர்சனம் செஞ்சீங்க. ஆனால் நீங்க, ’திட்டத்தை நிறுத்திடுறேனு’ சொல்லியா தேர்தலிலே நின்னீங்க, கூட ஒரு முட்டை போடுரேன்னு சொல்லித்தானே  மக்களை சந்திச்சீங்க.

அது கூட தெரியலயே இவங்களுக்கு!!


நடிகர் வடிவேலு :
‘வடிவேலு‘ங்கிற நெருப்பு மேலே காலை வச்சிட்டாரு விஜயகாந்த் அது எம்புட்டுக் கொதிக்குதுன்னு அனுபவிச்சுத்தான் ஆகணும்.
லொள்ளூ பாண்டி :
வடிவேலு சார்,  
நீங்களே உங்களை வச்சி காமெடி கீமெடி பண்ணிக்கிலயே.