இன்று ஒரு குறள் !

ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2008

சோதிடத்தை நம்பி ஏமாந்த முன்னாள் முதல்வர்!

என்னதான் ஒரு மனிதன் ஆடம்பரங்களின் மீது ஆசையற்று மிக எளிமையாக வாழ்ந்தாலும் பதவி மோகம் மட்டும் லேசில் விடாது என்பதற்கு முன்னால் புதுவை முதல்வர் ரங்கசாமியே ஒரு உதாரணம்.


தன்னிடமிருந்து பதவி பிடுங்கப்படுவதற்கு கடைசி நிமிடம் வரை, தன்னை தளராதவராய் வெளியில் காட்டிக்கொண்டு இயல்பாக இருந்தாலும்,

மற்றொரு பக்கம் தெருமுனை பிள்ளையார் கோவிலிலிருந்து புகழ் பெற்ற மணக்குள வினாயகர் கோயில் வரை நடத்திய பூசை புணஸ்காரங்கள் தான் எத்தனை?  செய்த யாகங்கள் தான் எத்தனை?

இது மட்டும் பத்தாது என்று வாஸ்து சாஸ்திரம் வேறு.



வாஸ்துக்காரன் சொன்ன ராசிப்படி, பதவியைக் காப்பாற்றுமென்று வீட்டு வாசலில் படிகளின் எண்ணிக்கையையும் மாறுதல் செய்தார்.

ஆனால் இவ்வளவு செய்தும் இதில் எதுவும் அவரின் பதவியை காப்பாற்றவில்லை.

சோதிடத்தின் பவர் நாரயணசாமியின் பவரிடம் தோற்றுப்போனது.



ஆம், நடந்தது கோஷ்டிப்பூசலின் உச்சக்கட்ட விளைவுதான்.

இரு தலைவர்களுக்காண ஈகோ பிரச்சினை, கோஷ்டிப்பிரச்சினையாக மாறி இறுதியில் ரங்கசாமியிடமிருந்து முதல்வர் பதவியை பறித்துக்கொண்டுதான் ஓய்ந்தது.

புதுவை மாநில மக்களில் பெரும்பாலோர் காங்கிரஸ் அனுதாபிகள் என்பதால் பொதுவாக இங்கு காங்கிரஸ்தான் ஜெயித்து ஆட்சி அமைக்கும்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது போலேதான், பிரிக்கமுடியாத “காங்கிரஸும் கோஷ்டி அரசியலும்” இங்கும் உள்ளது.

அதனால் தமிழத்தில் எப்படி ஒருவர் காங்கிரஸ் தலைவராக நீண்ட காலம் நிம்மதியாக பணியாற்ற மற்ற கோஷ்டிகள் விட மாட்டார்களோ அப்படிதான் இங்கு முதல்வர் பதவியும்.

ரங்கசாமி இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடித்ததே பெரிய விஷயம்.

அதுவும் பவர்புல் கோஷ்டி தலைவரும், டெல்லியில் பெரும் செல்வாக்குடையவரும், புதுவை மாநிலத்தின் நிரந்தர ராஷ்ய சபா உறுப்பினருமான நாரயணசாமியை எதிர்த்துக்கொண்டு இவ்வளவு காலம் பதவியில் நீடித்ததே பெரிய்ய்ய விஷயம்.

சரி ரங்கசாமிக்கு இப்போதைக்கு  ஒரு மந்திரி பதவியாவது கிடைக்குமா?  அதுக்கு ’அந்த சாமி’ அதான் நாராயணசாமி குறுக்கே வராம இருக்கானு பார்ப்போம்.

புதுவை மக்களுக்கு இது பழகிப்போன விஷயம்தான் என்றாலும் தங்கள் முதல்வரை தங்களால் தேர்வு செய்ய இயலவில்லையே, டெல்லிதானே தேர்வு செய்கிறது என்ற வருத்தம் நிச்சயம் இருக்கத்தானே செய்யும்.

புதிய முதல்வராக பதவியேற்க இருக்கும் திரு வைத்தியலிங்கத்திற்கு வாழ்த்துக்கள்.

பதவியை பத்திரமாக பார்த்து காப்பாத்தி வச்சிக்க ராசா!


டிஸ்கி:
எந்த ஆசாபாசமும் இல்லாதவராக அடையாளம் காணப்பட்ட ரங்கசாமி, பதவியை கடைசி வரைக்கும் விடாமல் அப்படி உடும்புபிடி பிடிக்க வைத்தது எது?

ஈகோவா?
பந்தாவா?
வசதிகளா?

ஞாயிறு, ஆகஸ்ட் 17, 2008

இந்தியா 'ஒரு மத' ச்சார்பற்ற நாடு!


ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுக்க. அதுவும் பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு. மாநிலம் தழுவிய அளவில் கலவரம் வெடித்துக் கொண்டிருக்கிறது.
எங்கு பார்த்தாலும் ஊர்வலங்கள். போராட்டங்கள். உண்ணாவிரதங்கள். இத்யாதி இத்யாதிகள். ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒருமாத காலமாக விடாமல் வீசிக்கொண்டிருக்கும் புயலுக்குக் காரணம் இரண்டு வார்த்தைகள். அவை, நிலம் மற்றும் மதம்.
அரசுக்குச் சொந்தமான வனப்பகுதியில் இருந்து சிறுபகுதியை எடுத்து அங்குள்ள கோயிலுக்கு வருகின்ற பக்தர்களும் பயணிகளும் பயன்படுத்திக் கொள்வதற்கு வசதியாக `ஸ்ரீ அமர்நாத் ஷ்ரைன் போர்ட்' என்ற அமைப்புக்கு தாற்காலிகமாகக் குத்தகைக்கு வழங்கியது மாநில அரசு. கொடுத்தது குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இதற்கு அங்கு பெரும்பான்மையாக வசித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களின் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்க, இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
அரசுக்கு எதிர்ப்பு வலுத்துக்கொண்டே போக, நிலைமையைச் சமாளிக்க நிலத்தைத் திரும்பப் பெற்றது ஆசாத் அரசு. ஆனாலும் அரசுக்கு மீண்டும் ஆதரவளிக்க முடியாது என்று கூட்டணி கட்சித்தலைவர் மெஹ்பூபா அறிவித்ததால், பதவியை ராஜினாமா செய்தார் முதல்வர் குலாம் நபி ஆசாத்.
இந்நிலையில், ஹூரியத் போன்ற இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அமர்நாத்துக்கு வந்த பக்தர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பா.ஜ.க. மற்றும் வி.ஹெச்.பி தொண்டர்கள் இஸ்லாமியர்களைத் தாக்கத் தொடங்கினர். சாதாரண மோதல் மெல்ல மெல்லக் கலவரமாக உருமாறியது. அடக்கப் பாய்ந்த காவல்துறை துப்பாக்கியைத் தூக்க, ஆறு பேர் பலியாகினர். எழுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

இஸ்லாமியர்களுக்கு மெக்கா எத்தனை புனிதமான தலமோ, அதைப்போலவே இந்துக்களுக்கு அமர்நாத். அங்கிருக்கும் பனி லிங்கத்தை ஆண்டுக்கு ஒருமுறை தரிசனம் செய்வது இந்துக்களின் நடைமுறை. அதுவும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாத்திரமே இந்தப் பனி லிங்கம் காணக் கிடைக்கும். முன்பெல்லாம் ஆகஸ்ட் மாதம் மட்டுமே லிங்கத்தைத் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், லிங்கத்தைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை வருடா வருடம் ஏறுமுகத்திலேயே இருந்ததால், சமீபகாலமாக பார்வைக்கான கால அளவு ஒரு மாதம் கூடுதலாக அனுமதிக்கப்பட்டது.
வெறும் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் என்ற அளவில் இருந்த பக்தர்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது லட்சங்களைத் தொட்டுவிட்டது. ஆனால், அவர்களுக்கான வசதிகள் எதுவும் அத்தனை போதுமானதாக இல்லை. குறிப்பாக, தங்கும் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் போன்றவை. போதாக்குறைக்கு தீவிரவாதிகளின் நடமாட்டம் வேறு. எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம் என்ற நிலை. இத்தனை பிரச்னைகள் இருந்தபோதும் அமர்நாத்துக்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை துளியும் குறையவில்லை.

குடியிருப்புப் பகுதிகளை அமைப்பதற்காகவோ அல்லது புதிய நகரை நிர்மாணிப்பதற்காகவோ நிலம் தரப்பட்டிருந்தால் இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததில் ஓர் அர்த்தம் இருக்கும். ஆனால் ஆலய நிர்வாகக் குழுவுக்குத் தரப்பட்ட அரசு நிலத்தில் செய்யப்படும் வசதிகள் அனைத்தும் நிரந்தரமாக அந்த இடத்திலேயே இருக்கப்போவதில்லை. தாற்காலிகப் பயன்பாடு என்பதால் எளிதில் அகற்றப்படும் வகையிலேயே அமைக்கப்படும். பயன்பாடு முடிந்ததும் பிரித்தெடுக்கப் பட்டுவிடும். ஆகவே, இதில் அச்சம் கொள்வது அவசியமற்றது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்க வக்ஃப் வாரியம் என்ற தனி அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கென்று தனி சிவில் சட்டம் அமலில் இருக்கிறது. அவர்களுடைய புனிதத் தலமான மெக்காவுக்குச் செல்வதற்கு இந்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்தியா முழுக்க சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இத்தனை உரிமைகளை இந்திய அரசு வழங்கியிருக்கிறது. ஆனால், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் இஸ்லாமியர்கள் அங்கு வருகின்ற இந்துக்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய குறைந்தபட்ச உரிமைகளுக்குக்கூட முட்டுக்கட்டை போடுவது ஏன்?
நிலம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களின் நோக்கம் கீழ்க்காணும் இரண்டில் ஒன்றாக இருக்கலாம் அல்லது இரண்டுமாகவும் இருக்கலாம்.
1. இந்துக்கள் தங்கள் பிராந்தியத்துக்குள் நுழையக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
2. இந்துக்களின் மதவழிபாடு எதுவும் தாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் நடத்தப்படக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

அப்படிப்பட்ட எந்த எண்ணமும் தங்களுக்கு இல்லை என்பதை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு ஜம்மு_காஷ்மீர் வாழ் இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது. அதேபோல, துப்பாக்கிப் பிரயோகமும் வெடிகுண்டுத் தாக்குதல்களும் அதிகம் இருக்கும் பிராந்தியத்துக்கு வந்து ஆலய தரிசனம் செய்யும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டியது மாநில அரசின் கடமை. அதனைச் சரிவர நிறைவேற்றுவதற்கு யாரேனும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நிலைமையைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது எப்படி என்றுதான் அரசு யோசிக்க வேண்டுமே ஒழிய, மிரட்டல்களுக்கு அடிபணிந்து, கொடுத்த நிலத்தைத் திரும்பப் பெறுவது ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.
தற்போது அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் வேறு போராட்டத்தில் குதித்துள்ளனர். விரைவில் கவுன்ட்டர் அட்டாக் கொடுக்கும் விதமாக இஸ்லாமிய மாணவர்கள் களத்தில் இறங்கக்கூடும். ஏற்கெனவே ஜிலீர் பிரதேசம் வேறு. போராட்ட நெருப்பை அணைப்பது அத்தனை சுலபமில்லை.
இறுதியாக ஒரு விஷயம். ஜம்மு_காஷ்மீரில் தற்போது வீறுகொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் மத யானைகளை அடக்க அரசுக்குத் தேவை ஆயுதங்கள் அல்ல, அங்குசங்கள்!

- நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

சுதந்திரதினம், இந்தியாவுக்கு 62வது! பிரதமருக்கு எப்போது?

சிறுவயதில் நான் மிருககாட்சி சாலைக்கு சென்று பார்த்திருக்கிறேன்.

வன விலங்குகளை கூண்டில் போட்டு அடைத்து வைத்திருப்பார்கள். பார்வையாளர்கள் வெளியிலிருந்து அவைகளை பார்த்துக்கொண்டே செல்வர்.

ஆனால் இப்போதெல்லாம் பெரிய வன விலங்கு பூங்காக்களில் அப்படி செய்வதில்லை.விலங்குகள் வெளியில் சுதந்திரமாக நடமாடும்.

மாறாக, பார்வையாளர்கள் கம்பி வலை போட்ட தடுப்புக்குள் இருந்தபடியே பார்வையிடுவர்.

இன்னும் சில வெளிநாடுகளில் உள்ள பூங்காக்களில் பார்வையாளர்கள் தங்களின் காரின் உள்ளே இருந்தபடியே மெதுவே பயணம் செய்து கொண்டு விலங்குகளை பார்வையிட்டபடியே செல்ல வேண்டியிருக்கும்.



சுதந்திர தினத்தன்று நம் பிரதமரை பார்த்தபோது எனக்கு இது தான் தோன்றியது.

தீவிரவாதிகள் மக்களோடு கலந்து சுதந்திரமாக நாட்டில் நடமாடிக்கொண்டிருக்க, பிரதமர் குண்டு துளைக்காத கூண்டில் நின்று சுதந்திர தின உரையாற்ற வேண்டிய நிலைமை.


தீவிரவாதிகளைப்பொறுத்தவரை நம் நாடு ஒரு சொர்க்கபூமி.

எங்கும் சுதந்திரம் எப்போதும் சுதந்திரம்.

அவர்களின் சாதி,மதக்கவசங்கள் சட்டத்தின் பிடியிலிருந்து அவர்களை காப்பாற்றும்.

தப்பித்தவறி பிடிபட நேர்ந்தாலும்,உயிருக்கு உத்தரவாதம் உண்டு.

சுப்ரீம் கோர்ட்டே தூக்குத் தண்டனையை உறுதி செய்தாலும், அரசியல்வாதிகள் அதை கிடப்பில் போட்டு விடுவார்கள்.

சிறைச்சாலைகளிலும் பீடி, சிகரெட், கஞ்சா, குவார்ட்டர், குட்டி மட்டுமல்லாது உள்ளேயே சதித்திட்டம் போட செல்போன், சிம் கார்டுகள் எல்லாம் கிடைக்கும்.

பிறகென்ன ஜமாய்தான்.



ஆனால் பாவம் நமது பாரத பிரதமர், பெரும்பான்மை இந்திய மக்கள்களால் ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுக்கப்பட்டாலும், வருடா வருடம் கூண்டிற்குள் ஒளிந்துக்கொண்டு உரையாற்ற வேண்டியதாயுள்ளது.

வாழ்க இந்திய சனநாயகம்!


சுதந்திர தினம்,
இந்தியாவிற்கு 62வது!
நம் பிரதமருக்கு எப்போது?

சனி, ஆகஸ்ட் 16, 2008

இந்தியாவின் 62வது சுதந்திரதினம்













இந்தியாவின் 62வது சுதந்திரதினம், நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

செங்கோட்டையில் பிரதமராலும் மாநில தலைநகரங்களில் முதல்வர்களாலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின செய்தி உரையாற்றப்பட்டது.

மாணவ மாணவியர்கள் சட்டையில் கொடியும் வாயில் இனிப்புமாக கொண்டாட்டங்களை கண்டு ரசித்தார்கள்.

பெரும்பாலரோ ஏதோ விடுமுறை கிடைத்தது என நாள் முழுதும் ஓய்வெடுத்தபடி தொலைக்காட்சி முன் அமர்ந்து தங்கள் அபிமான நடிகர் நடிகையினரின் பேட்டி கண்டு புளகாங்கிதம் அடைந்து மகிழ்ந்தனர்.

உளவுத்துறையினரும், காவல் துறையினரும் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் அனைத்தும் நல்ல முறையில் நடந்த நிம்மதியுடனும்,
அடுத்து வரப்போகும் ஜனவரி 26 குடியரசு தின விழா நல்ல முறையில் நடக்க வேண்டுமே என்று மனதில் ஒரு ஓரத்தில் அரும்புவிட ஆரம்பித்த சிறு கவலையுடனும் உறங்கப்போயினர்.

இப்படியாக உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக தேசத்தின் முக்கிய தேசியத்திருநாள் இனிதே கழிந்து போனது.

திங்கள், ஆகஸ்ட் 04, 2008

மாட்டினார்டா ர‌ஜினி, விடாதே பிடி!

ர‌ஜினி ம‌ன்னிப்பு கேட்டார் க‌ர்நாட‌க‌ ம‌க்க‌ளிட‌ம்.

இன்றைய‌ ஹாட் டாபிக்ஸ் இதுதான்.இது ப‌ற்றிய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள் எல்லா மீடியாக்க‌ளிலும் இருந்தாலும் ந‌ம் வ‌லையுல‌கில் கொஞ்ச‌ம் அதிக‌ம்தான்.

அப்புற‌ம் ந‌ம்ப‌ க‌ருத்தை ப‌திவு ப‌ண்ண‌லேனா எப்ப‌டி, அதுக்குதான் இந்த‌ இடுகை கொஞ்ச‌ம் ம‌ன‌சாட்சியோடு.


நான் ஒரு ப‌ட‌த்தில் பார்த்திருக்கிறேன். ப‌ட‌ம் பெய‌ர் ஞாப‌க‌மில்லை.

ஒருவ‌னை விசார‌ணைக்கு காவ‌ல் நிலைய‌ம் கொண்டு வ‌ந்திருப்பார்க‌ள். திடீரென்று இரண்டு பேர்க‌ள் போகிற‌ போக்கில், ஏன்? என்ன‌? என்று கேள்வி கேட்காம‌லேயே இவ‌னை அடித்து விட்டு செல்வார்க‌ள்.
அத‌ற்கு அங்குள்ள‌ போலீஸ்கார‌ர் சொல்வார் இவ‌ர்க‌ள் டுட்டி முடிந்து வீட்டுக்கு போகும் போலீஸார் என்று.
சிறிது நேர‌த்தில் இன்னும் சில‌ பேர் வ‌ந்து அடித்துவிட்டு போவார்க‌ள் அத‌ற்கு இவ‌ர் சொல்வார் இவ‌ர்க‌ள் இப்ப‌த்தான் டூட்டி ஆர‌ம்பிக்க‌ வ‌ந்திருப்ப‌வ‌ர்க‌ள்.

அத‌ற்கு இவ‌னோ, "ஏண்டா, டூட்டி முடிச்ச‌வ‌னும் அடிக்கிறான், ஆர‌ம்பிக்கிற‌வ‌னும் அடிக்கிறான். அடிக்கிற‌து தான் அடிக்கிறீங்க‌ என்ன‌ ஏதுனு விசாரிச்சுட்டு எதுக்குனு சொல்லிட்டு அடிக்க‌ மாட்டீங்க‌லாடா" என்று.

இப்ப‌ என‌க்கு அந்த‌ ச‌ம்ப‌வ‌ம்தான் ஞாப‌க‌ம் வ‌ருது.


அன்று ந‌ட‌ந்த‌து என்ன‌? கொஞ்ச‌ம் திரும்பி பார்ப்போம்.


க‌ர்நாட‌க‌த்தில் தேர்த‌ல் வ‌ந்த‌ நேர‌ம் அத‌னால் அங்குள்ள‌ அர‌சிய‌ல்க‌ட்சிக‌ள் ம‌க்க‌ளை க‌வ‌ர‌ போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்த‌ன‌.
அதில் ஒரு அர‌சிய‌ல்வாதி ம‌க்க‌ளின் சென்சிடிவ் மேட்ட‌ரான‌ ந‌தி நீர் பிர‌ச்சினையை கையில் எடுத்த‌தும‌ல்லாம‌ல், ஒக்க‌ன‌க்க‌லுக்கு நேரில் வ‌ந்து ஒரு சொட்டு நீர் கூட‌ த‌மிழ‌த்திற்கு த‌ர‌ மாட்டோம் என‌ முழ‌ங்கி இந்த‌ ச‌ர்ச்சையை ஆர‌ம்பித்து வைத்தார்.

எதிர்பார்த்த‌து போல‌வே அத‌ற்கு எதிர்வினை ஆத‌ர‌வுவினையென்று விவாத‌ங்க‌ளும், கூட‌வே வ‌ன்முறையாள‌ர்க‌ளின் கைங்க‌ர்ய‌த்தினால் வாக‌ன‌ங்க‌ளும் கொடும்பாவிக‌ளும் கொழுந்துவிட்டு எரிந்த‌ன‌.

மூத்த‌ அர‌சிய‌ல்வாதியும், ஒரு மாநில‌த்தின் முத‌ல்வ‌ருமான‌ க‌லைஞ‌ர் கூட‌,"என் எலும்பை உடைத்தாலும் ஒக்க‌னேக்க‌ல் திட்ட‌த்தை நிறைவேற்றியே தீருவேன்" என் போர்ப்ப‌ர‌ணி பாடினார்.

த‌மிழ்நாடும் க‌ர்நாட‌க‌மும் இறுதிப்போருக்கு த‌யாராகி விட்ட‌து போன்றே ஒரு தோற்ற‌ம் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து.


ராம‌நாராய‌ணின் ஏற்பாட்டினால் க‌லைய‌ல‌க‌த்தின‌ரைம் இந்த‌ போராட்ட‌த்தில் க‌ல‌ந்துக்கொள்ளுமாறு செய்ய‌ப்ப‌ட்ட‌து.

ஒக்க‌னேக்க‌ல் திட்ட‌த்தை எதிர்க்கும் க‌ர்நாட‌க‌த்தைக் க‌ண்டித்து திரையுல‌க‌த்தின‌ரின் உண்ணாவிர‌த‌ப்போராட்டம் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

அதுவும் எப்ப‌டி?

இந்த‌ போராட்ட‌த்தில் அனைவ‌ரும் க‌ல‌ந்துக்கொள்ள‌ வேண்டும்.
குறிப்பாக‌ கர்நாட‌த்தைப் பிற‌ப்பிட‌மாக‌க் கொண்டு த‌மிழ்த்திரையுல‌கில் இருக்கும் ந‌டிக‌ர்க‌ள் அனைவ‌ரும் க‌ண்டிப்பாக‌ க‌ல‌ந்துக்கொள்ள‌ வேண்டும்.
த‌வ‌றினால், இனி த‌மிழ்த்திரைப்ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ முடியாத‌ப‌டி யாரும் ஒத்துழைப்பு த‌ர‌மாட்டார்க‌ள் என்று அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

அப்போதே இது ர‌ஜினிக்கு வைத்த‌ வ‌லை என்று எல்லோருக்குமே தெரிந்தது.


{(ஒரு சின்ன‌ Flash Back

இதே போல‌ இர‌ண்டு ஆண்டுக‌ளுக்கு முன்பு இதே திரையுல‌க‌த்தின‌ர் இதே க‌ர்நாட‌க‌த்தைக் க‌ண்டித்து பார‌திராஜா த‌லைமையில் நெய்வேலியில் ஆர்ப்பாட்ட‌ம் ந‌ட‌த்திய‌போது,
ர‌ஜினி க‌ல‌ந்துக்கொள்ளாது த‌விர்த்து ப‌ல‌ விம‌ர்ச‌ங்க‌ளுக்கு ஆளாகி,
அடுத்த‌ நாள் சென்னையில் த‌னியாக‌ உண்ணாவிர‌த‌ போராட்ட‌ம் ந‌ட‌த்தினார்.
அப்போது இதில் ந‌ம் உள்மாநில‌ அர‌சிய‌லும் சேர்ந்து விளையாடிய‌து.)]



உண்ணாவிர‌த‌ம் தொட‌ங்கிய‌து.
ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் எதிர்பார்ப்புக‌ளை தூக்கிய‌டிக்கும் வ‌கையில் ர‌ஜினி அந்த‌ உண்ணாவிர‌த‌த்தில் ப‌ங்கு கொண்டார்(அப்ப‌டி அவ‌ர் க‌ல‌ந்துக்கொள்ளாம‌ல் இருந்திருந்தால் இப்ப‌ அடித்த‌ கும்மிக‌ள் அப்போதே அடிக்க‌ப்ப‌ட்டிருக்கும்)

அந்த‌க்கூட்ட‌த்தில் கூட‌ சில‌ ந‌டிக‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து பேச்சாலும் செய‌லாலும் அவ‌ரை சீண்டின‌ர்.

பின்ன‌ர் அவ‌ர் உரை நிகழ்த்தும் போது மிக‌வும் உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டார்.
ம‌ற்ற‌வ‌ர்க‌ளைவிட‌ த‌ன் த‌மிழ்நாட்டுப்ப‌ற்று ச‌ற்றும் குறைந்த‌த‌ல்ல‌ என
காட்ட‌வோ, என்ன‌மோ மிக‌ காட்ட‌மாக‌, "ஒக்க‌னேக்க‌ல் திட்ட‌த்திற்கு பிர‌ச்சினை செய்ப‌வ‌ர்க‌ளை உதைக்க‌ வேண்டாமா" என‌ கேட்டார்.

அத‌ன் பிற‌கு க‌ர்நாட‌க‌த்தில் ஆங்காங்கே ர‌ஜினி கொடும்பாவி எரிக்க‌ ஆர‌ம்பித்தார்க‌ள்.

ந‌ம‌து த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரும் தேர்த‌ல் நேர‌த்தில், த‌ன‌து கூட்ட‌ணிக்க‌ட்சியான‌ காங்கிர‌ஸிற்கு த‌ர்ம‌ச‌ங்க‌ட‌ம் த‌ர‌வேண்டாமென‌ த‌ற்காலிக‌மாக‌ இந்த‌த்திட்ட‌த்தையே நிறுத்தி வைப்ப‌தாக‌ அறிவித்தார்.

ஆக‌ மொத்த‌த்தில் ஒக்க‌னேக்க‌லுக்காக‌ க‌ர்நாட‌க‌த்துடன் ஒரு போர்பிர‌க‌ட‌ன‌ம் செய்வ‌து போன்ற‌ ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ பிர‌ச்னை, க‌டைசியில் ர‌ஜினியின் மாநில‌ப்ப‌ற்றை சோதித்தத‌ற்கு பின் ஒரு ச‌ப்பை மேட்ட‌ராகி செத்துப் போன‌து.

ஆனாலும் க‌ர்நாட‌க‌த்தில் ர‌ஜினியின் கொடும்பாவி எரிப்பு ம‌ட்டும் தொடர் க‌தையான‌து.


அர‌சிய‌ல்வாதிக‌ளின் வீண் அல‌ங்கார‌ ஆர்ப்ப‌ரிப்பு வார்த்தைக‌ளை ந‌ம்பி, தானும் உண்ர்ச்சிவ‌ச‌ப்ப‌ட்டு, ப‌லிக‌டா ஆன‌தை மிக‌ லேட்டாக‌வே ர‌ஜினி உண‌ர்ந்திருக்க‌ வேண்டும்.

அதிலிருந்து மவுன‌ம் சாதித்து வ‌ந்த‌வர், இன்று அவ‌ருடைய‌ குசேல‌ன் ப‌ட‌ வெளியீட்டிற்கு க‌ர்நாட‌க‌த்தில் வ‌ந்த‌ எதிர்ப்பினால், த‌ன் ர‌சிக‌ர்க‌ளுக்கும் அடாவ‌டிக்கார‌ர்க‌ளுக்கும் பிர‌ச்னை ஏற்ப‌ட்டு வீண் க‌ல‌வ‌ர‌ம் வ‌ருவ‌து ம‌ட்டும‌ல்லாம‌ல், திரைப்ப‌ட‌த்தொழிலை ம‌ட்டுமே ந‌ம்பி பிழைக்கும் ப‌ல‌ பேர் பாதிக்க‌ப்ப‌டுவார்க‌ளே என்ற‌ ந‌ல்லெண்ண‌த்தில் தான், தான் ஒரு க‌ட்ட‌த்தில் உணர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டு பேசி, பின் அப்ப‌டி பேசி இருக்க‌வே கூடாது என்று த‌ன‌க்குத்தானே முடிவு செய்துகொண்ட‌ அந்த‌ வார்த்தையை கூறி அத‌ற்காக‌ வ‌ருத்த‌ம் தெரிவித்துக்கொண்டிருக்க‌ வேண்டும்.

இதில் எங்கே இருக்கிற‌து முர‌ண்பாடு.


இப்ப‌டி பேசிய‌த‌ற்காக‌ அவ‌ர் கொடும்பாவியை க‌ர்நாட‌க‌த்தில் தொட‌ர்ச்சியாக‌ எரித்த‌போது எத்த‌னை பேர் அவ‌ருக்கு உறுதுணையாக‌ நின்றார்க‌ள். அது ஏதோ ர‌ஜினியின் சொந்த‌ப்பிர‌ச்சினை போல‌ அல்ல‌வா க‌ண்டும் காணாம‌ல் இருந்த்தார்க‌ள்.

இப்போது அவ‌ர் வ‌ருத்த‌ம் தெரிவித்த‌வுட‌ன், க‌ர்நாட‌க‌த்திட‌ம் ம‌ன்னிப்பு கேட்டு விட்டார் ர‌ஜினி!விடாதே, பிடி!! என்று எல்லோரும் ஓடி வ‌ருகிறார்க‌ள்.

க‌ர்நாட‌க‌மா த‌மிழ‌க‌மா என்றால் ர‌ஜினி ந‌ம் ப‌க்க‌ம் தான் என்ப‌தை விட‌
அவ‌ர் எப்ப‌ ச‌றுக்குவார் ஏறி மிதிக்க‌லாம் என்று அலைவ‌து நியாய‌ந்தானா?

சிந்திப்போம்!

ர‌ஜினி ஒரு திரைப்ப‌ட‌க்க‌லைஞ‌ன்!
அர‌சிய‌ல்வாதிய‌ல்ல‌!!


டிஸ்கி1: இதை எழுத‌ ஆர‌ம்பித்து 5 நாட்க‌ள் ஆகிற‌து. நேர‌மின்மையால் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ இன்றுதான் முடிக்க‌ முடிந்த‌து. முடிஞ்சி போன‌ மேட்டர்னு நினைக்காதிங்க‌ .

ஆறின‌ க‌ஞ்சி ப‌ழ‌ங்க‌ஞ்சி உண்மைதான். ஆனால் இது சாதா க‌ஞ்சி அல்ல‌, சுண்ட‌க்க‌ஞ்சி
நாள் ஆக‌ ஆக‌த்தான் போதை ;-o

டிஸ்கி2: நான் ர‌ஜினி ர‌சிக‌ன் அல்ல‌. இன்னும் குசேல‌ன் பார்க்க‌வில்லை.