இன்று ஒரு குறள் !

ஞாயிறு, ஆகஸ்ட் 17, 2008

சுதந்திரதினம், இந்தியாவுக்கு 62வது! பிரதமருக்கு எப்போது?

சிறுவயதில் நான் மிருககாட்சி சாலைக்கு சென்று பார்த்திருக்கிறேன்.

வன விலங்குகளை கூண்டில் போட்டு அடைத்து வைத்திருப்பார்கள். பார்வையாளர்கள் வெளியிலிருந்து அவைகளை பார்த்துக்கொண்டே செல்வர்.

ஆனால் இப்போதெல்லாம் பெரிய வன விலங்கு பூங்காக்களில் அப்படி செய்வதில்லை.விலங்குகள் வெளியில் சுதந்திரமாக நடமாடும்.

மாறாக, பார்வையாளர்கள் கம்பி வலை போட்ட தடுப்புக்குள் இருந்தபடியே பார்வையிடுவர்.

இன்னும் சில வெளிநாடுகளில் உள்ள பூங்காக்களில் பார்வையாளர்கள் தங்களின் காரின் உள்ளே இருந்தபடியே மெதுவே பயணம் செய்து கொண்டு விலங்குகளை பார்வையிட்டபடியே செல்ல வேண்டியிருக்கும்.



சுதந்திர தினத்தன்று நம் பிரதமரை பார்த்தபோது எனக்கு இது தான் தோன்றியது.

தீவிரவாதிகள் மக்களோடு கலந்து சுதந்திரமாக நாட்டில் நடமாடிக்கொண்டிருக்க, பிரதமர் குண்டு துளைக்காத கூண்டில் நின்று சுதந்திர தின உரையாற்ற வேண்டிய நிலைமை.


தீவிரவாதிகளைப்பொறுத்தவரை நம் நாடு ஒரு சொர்க்கபூமி.

எங்கும் சுதந்திரம் எப்போதும் சுதந்திரம்.

அவர்களின் சாதி,மதக்கவசங்கள் சட்டத்தின் பிடியிலிருந்து அவர்களை காப்பாற்றும்.

தப்பித்தவறி பிடிபட நேர்ந்தாலும்,உயிருக்கு உத்தரவாதம் உண்டு.

சுப்ரீம் கோர்ட்டே தூக்குத் தண்டனையை உறுதி செய்தாலும், அரசியல்வாதிகள் அதை கிடப்பில் போட்டு விடுவார்கள்.

சிறைச்சாலைகளிலும் பீடி, சிகரெட், கஞ்சா, குவார்ட்டர், குட்டி மட்டுமல்லாது உள்ளேயே சதித்திட்டம் போட செல்போன், சிம் கார்டுகள் எல்லாம் கிடைக்கும்.

பிறகென்ன ஜமாய்தான்.



ஆனால் பாவம் நமது பாரத பிரதமர், பெரும்பான்மை இந்திய மக்கள்களால் ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுக்கப்பட்டாலும், வருடா வருடம் கூண்டிற்குள் ஒளிந்துக்கொண்டு உரையாற்ற வேண்டியதாயுள்ளது.

வாழ்க இந்திய சனநாயகம்!


சுதந்திர தினம்,
இந்தியாவிற்கு 62வது!
நம் பிரதமருக்கு எப்போது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக