இன்று ஒரு குறள் !

ஞாயிறு, மே 27, 2012

இது தான் சவுதி அரேபியா - நெயில் பாலி்ஷ் பூசிய நகங்களுடன் வந்த பெண்ணுடன் மோதிய செளதி போலீஸ்!

இன்று தட்ஸ் தமிழில் மேய்ந்த போது இந்த செய்தி கண்ணில் பட்டது. உடனே யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்று பதிவேற்றி உள்ளேன்.

இங்குள்ள சிலரால் சவுதி ஒரு புனித பூமி ரேஞ்சுக்கு பேசப் படுகிறது. அந்த விசுவாசத்தின் உச்ச கட்டமாய் இந்தியாவையும் மட்டப் படுத்த தோன்றுகிறது.

 இதற்காக இணையத்தில் தேடியலைந்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் செய்திகளையும், ஒளி, ஒலிப் பதிவுகளையும் பதிவேற்றுகிறார்கள்.

 அவர்களுக்கு, அவர்களின் புனித பூமியின் லட்சணத்தை புரிய வைக்க, தானாக வந்து கண்ணில் பட்ட இந்த ஒளிப்பதிவை காண தருகிறேன்.

கீழே தட்ஸ்தமில் செய்திக்கு பிறகு  சுட்டியை சொடுக்கி பார்க்கவும்



நெயில் பாலி்ஷ் பூசிய நகங்களுடன் வந்த பெண்ணுடன் மோதிய செளதி போலீஸ்!


லண்டன்: செளதியில், நெயில் பாலிஷ் பூசிய நகங்களுடன் வந்த பெண்ணுடன் மத மாண்புகளைக் காக்க நியமிக்கப்பட்ட போலீஸார் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செளதியில் பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். இதில் பெண்களுக்குத்தான் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், விதிமுறைகள். வாகனம் ஓட்டக் கூட அங்குள்ள பெண்களுக்கு அனுமதி கிடையாது.

இந்த நிலையில் கை விரல்களில் நெயில் பாலிஷ் பூச்சுடன் வந்த பெண்ணை தடுத்து நிறுத்தி மத மாண்புகளைக் காக்கும் போலீஸார் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சியை அநத்ப் பெண் யூடியூபில் போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

அந்தப் பெண்ணின் பெயர் விவரம் தெரியவில்லை. அவர் ஒரு ஷாப்பிங் மாலுக்கு வருகிறார். அவரை மாலின் நடுப்பகுதியில் வைத்து போலீஸார் தடுக்கின்றனர். கையில் நெயில் பாலிஷ் போட்டுள்ளதன் மூலம் மத மாண்புகளுக்குப் புறம்பாக நடந்துள்ளீர்கள். எனவே உள்ளே வரக் கூடாது என்று உத்தரவிடுகின்றனர்.

இதைக் கேட்டு கோபமடைந்த அப்பெண், என் கையில் என்ன இருக்கிறது என்பதை பார்க்க வேண்டிய வேலை உங்களுக்கு இல்லை. அது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது. என்னைப் பின் தொடர்ந்து வர நீங்கள் யார் என்று ஆவேசமாக கூறுகிறார்.

ஆனால் அவரை உள்ளே விட அனுமதிக்க முடியாது என்று போலீஸார் கோபத்துடன் கூறுகின்றனர். அவர்களுக்கு அதே கோபத்துடன் பதிலடி கொடுத்து வாக்குவாதம் புரிகிறார் அப்பெண்.

மாலின் நடு ஹாலில் நின்றபடி நடந்த இந்த வாக்குவாதம் செளதியில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனராம்.

  - நன்றி  tamil.oneindia.in



சொடுக்கி பார்க்கவும்

http://www.youtube.com/watch?v=OpUUOYRLW3k




சனி, மே 26, 2012

அம்மாவின் கலைஞர்தனம்

ஜெவுக்கம் கலைஞருக்கும் எனக்கு தெரிஞ்சி ஒரே ஒரு விஷயத்திம் மட்டுமே ஒற்றுமையுண்டு அது என்னான்னு அப்புறம் சொல்றேன்.
மற்றபடி இருவரும் செயல்பாடுகளும் வெவ்வேறு வகையானது.

ஜெவின் செயல்களில் 'நான்' என்ற ஆணவம் இருந்தாலும், வழ வழா கொழ கொழா என்று  இருக்காது. எப்போதும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தான். 

அது விடுதலைபுலிகள் இயக்க எதிர்ப்பு ஆகட்டும் வீரப்பன் என்கவுண்டர் ஆகட்டும் 

இன்னும் சங்கராச்சாரியார் கைது, வாஜ்பாயி ஆட்சி கவிழ்ப்பு, பிரபாகரன் கைது தீர்மானம், பொடா அரசு ஊழியர் சாலைப்பணியாளர் பிரச்னைகள் என்று தொடர்ந்து 

இப்போது தலைமைசெயலகம் மாற்றம், சமச்சீர் கல்வி கைவிடும் முயற்சி என்று சொல்லிக்கொண்டே போகலாம். 

மக்கள் என்ன நினைப்பார்கள், மீடியா என்ன சொல்வார்கள் என்ற எண்ணம்  கிஞ்சித்தும் இல்லாமல், தான் நினைத்தபடி ஒரு முடிவு எடுத்து  அதில் உறுதியாய் நிற்பது அவரது தனி ஸ்டைல்.

ஆனால் கலைஞரோ  எவ்வளவு முக்கியமான பிரச்னையிலும் தன்னுடைய  முடிவை தெளிவாக அறிவித்து அதை முன்னெடுக்க  இயலாமை

சட்ட எரிப்பு போராட்டம் நடத்திவிட்டு பின் நீதிமன்றத்தில் ஒரு காகிதத்தைதான் எரித்தோம் என்று கூறுதல்

சங்கராச்சாரியார் வழக்கு மொக்கையாகும் வரை கண்டுகொள்ளாமல் இருப்பது, ஒரு பக்கம் மத்திய அரசில் பங்கெடுத்துக்கொண்டே இன்னொருபக்கம் ஈழப்போருக்கான போராட்டங்கள் நடத்துதல்

  நான்கு மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்திவிட்டு இறுதியில் போர் நின்றுவிட்டது என்ற பொய்யாக அறிவித்தல்

இப்படி பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க மல்டி ரோல்களில் மிளிர்வது கலைஞர் ஸ்டைல்.

ஆனால் இப்போது அது ஈழத்தமிழர் விஷயத்தில் இளித்துக்கொண்டு போய்விட்டது என்பது வேறு விஷயம்


இப்படியிருக்க

சமீபத்தில் ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற 3 பேரின் உயிர் போகும் பிரச்சினையில் ஜெ கலைஞர் போல மங்காத்தா ஆடியிருக்கிறார்.  

கடந்த மாதத்தில்  தமிழக சட்டமன்றத்தில், மூன்று பேரின் தூக்குத்தண்டனையை ரத்துச் செய்ய சொல்லி மத்திய அரசைக் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியவர்,

 இந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மூவரின் மரண தண்டனை ரத்து செய்ய கோரும் வழக்கில்,  மனுவையே தள்ளுபடி செய்யும்படி ஜெவின் தமிழக அரசு கேட்டுகொண்டுள்ளது.

என்ன ஒரு தெளிவு அம்மையாருக்கு!

தமிழர்களை ஏமாற்றும் விஷயத்தில் ஜெவும் கலைஞரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று வைகோவும் அறிக்கை விட்டு இருக்கிறார். ஆனால் இதுவரை  ஜெவிடமிருந்து  எந்த பதிலும் இல்லை.

பொதுவாக ஜெவின் அல்லக்கைகள் அவர் பெயர் போட்டு அடிக்கும் சுவரொட்டிகளில் "புரட்சிதலைவி அம்மா" அவர்கள் என்றே குறிப்பிடுவர்.
இனி அதை மாற்றி "கலைஞர் அம்மா" அவர்கள் என்று குறிப்பிட்டாலும் 
பொருத்தமாகவே இருக்கும்



டிஸ்கி : ஜெவுக்கம் கலைஞருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, 'மக்களை ஏமாற்றி சுரண்டுவது' என்பது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியணும்னா, உங்களுக்கு இவங்க நிச்சயமா தேவைதான்.

வேற என்னத்த சொல்ல :-(

துளிகள் : தமிழ் புத்தாண்டு, கலெக்டர் சகாயம், ராமஜெயம்



 நான் போன இடுகையில் எழுதிய மாதிரியே முன்னாள் மந்திரி கே என் நேருவின் தம்பி கொலை வழக்கில், போலீஸ் ஒரு இஞ்ச் கூட முன்னேறியது மாதிரி தெரியவில்லை. இன்னமும் துப்பு துலக்குகிறார்களாம். இதில் அம்மா ஆட்சிக்கு வந்ததால் சட்டம் ஒழுங்கு ரொம்ப சீர்பட்டு விட்டதாக பெருமைமிகு பிரசாரம் வேறு.



மதுரை கலெக்டர் சகாயம் கோ ஆப் டெக்ஸ் க்கு மாற்றம் செய்ய பட்டிருக்கிறார்.
திறமை மிகுந்த, ஊழலற்ற, மக்கள் நலனை முதன்மையானதாக கருதிய கலெக்டர் என் சாதாரண உழைக்கும் மக்களால் அனுமானிக்கப்பட்ட திரு சகாயம், ஒரு உப்பு சப்பில்லாத துறைக்கு திடீரென மாற்றப்பட்டதன் மர்மம் என்னமோ ???!!!

பொதுவாக சில வருடங்களாக, ஜனவரி மாதத்திலும் ஏப்ரல் மாதத்திலும் தமிழ் வருட பிறப்பு எதுவென்று நிறைய விவாதங்கள் நடக்கும். ஆனால் மே மாதமான இந்த மாதத்தில், ஓரிரு நாட்களுக்கு முன் இதைப் பற்றி இடுகை ஒன்றை படிக்க நேர்ந்தது.



அதில் தமிழ் புத்தாண்டை தை மாதம் முதல் தேதியாக அறிவித்த கருணா்நிதி செய்தது சரி என்றும் அதை திரும்ப சித்திரை ஒண்ணுக்கு மாற்றிய ஜெயலலிதா செய்தது ஆர்ய சூழ்ச்சி என்றும் சொல்லப்பட்டிருந்தது.

மேலும் அப்படி தமிழ் புத்தாண்டை மாற்றிய ஜெவை கண்டிக்காத தமிழறிஞர்களையும் அது சாடி இருந்தது.

இதை பார்த்ததும் என் மனதில் எழுந்த எண்ணங்கள்

இதற்கு மட்டுமா தமிழறிஞர்கள் மவுனியாக இருக்கின்றனர் அண்ணா நூலக மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைக்கும் தானே. அவர்கள் தான் என்ன செய்வார்கள் பாவம்!

எதிர்கட்சியின் ஹீரோவாக கொண்டாடப்பட்ட நம்ம அஞசாநெஞ்சன் அண்ணாச்சியே மம்மியை  பார்த்து பம்மி கிட்டு இருக்கும்போது எந்த ஒரு பலமான பின்புலமும் இல்லாத தமிழ் அறிஞர்கள் என்ன செய்ய இயலும்?

மீண்டும் சந்திப்போம் நண்பர்களே