இன்று ஒரு குறள் !

சனி, ஜூலை 24, 2010

பதிவர் சவுக்கு சங்கரின் கைதுக்கு கடுமையான கண்டனங்கள்






சவுக்கு என்ற பெயரில் பதிவு ஒன்றை ஆரம்பித்து ஊழல் பெருச்சாளிகளின் திருவிளையாடல்களை அப்படியே பிட்டு பிட்டு வைத்து அவர்களின் முகத்திரையை கிழித்து தோரணமாய் தொங்க விட்டு கொண்டிருந்தார் சங்கர்   என்கின்ற முன்னால் காவல்துறை அதிகாரி

அவரின் பதிவுகள் கிசு கிசு பாணியில் இல்லாமல் பகிங்கரமாகவே ஊழலதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டே சொல்லப்பட்டிருக்கும், சில பதிவுகளில் தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமான டாக்குமெண்ட் நகல்களையும் இணைத்திருப்பார்.

இப்படி சவுக்கை சுழட்டி சுழட்டி அடித்து வெளுத்துக் கொண்டிருந்தவருக்கு கண்டிப்பாக ஆட்டோ வரும் என்று வாசகர்கள் பலர் எதிர்பார்த்ததை போலவே அவரும் எதிர்பார்த்திருந்தார். அதையும் பதிவு செய்திருந்தார். தனக்கு எதிராக என்ன செய்யலாமென்று, எந்த இடத்தில், யார்யாரெல்லாம் ஆலோசனை செய்கிறார்கள் என்பதையெல்லாம் கூட பதிவில் எழுதியிருந்தார்.


அவர் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டதாக நேற்று தான் எனக்கு, பதிவுலகம் மூலம் தெரிய வந்தது

"சரி, எந்தெந்த குற்றப்பிரிவில்  அவரை கைது செய்துள்ளனர் ? எப்படியும் அவரை ஒன்றும் செய்ய முடியாது. அவரிடம் தான், எழுதிய அனைத்திற்கும் ஆதாரம் உள்ளதே" என்று எண்ணியபடியே பதிவுகளை மேய்ந்தால், அதிர்ச்சி! அவரை கைது செய்ததற்கு காரணமாய் அவர் எழுத்து சொல்லப்படவில்லை. மாறாக, அம்மா காலத்து கஞ்சா கேஸ்போல், வேறு ஏதோ நாடகம் செட் பண்ணி,  ஜாமினில் வர முடியாத ஒரு இபிகோ வில்  கைது செய்துள்ளனராம். அட தேவுடா..........

உங்களிடம் நியாயம் இருந்தால், அவர் எழுத்தை நேர்மையாக அல்லவா சந்தித்து இருக்க வேண்டும் . அவர் தான் பேரை குறிப்பிட்டு , ஊரை குறிப்பிட்டு  பக்காவாக உங்கள் வண்டவாளங்களை சொல்கிறாரே. அப்படிப்பட்டவர் ஓடி ஒளியவா போகிறார்.

இந்த ஒரு செயல் மூலமே சவுக்கில் எழுதியவை அனைத்தும் ஒரு எழுத்து பிசகாமல் உண்மை என்றாகிவிட்டதே.


என்னமோ போங்க, "முட்டா குருவும் மூட சீடர்களும்" னு ஒரு சொல்வடை எங்க ஊர்ப்பக்கம் சொல்வாங்க, அதான் எனக்கு இப்ப ஞாபகத்துக்கு வருது. 'இம்சை அரசனும் இந்த எழவெடுத்த அதிகாரிகளும்' தான், தமிழ் நாட்டு அரசாங்கத்தை நடத்திட்டு வராங்க.

பாவம் மக்கள்!


ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கின்றது என்ற ஆணவத்தில்,  எழுத்துப்பணிக்கு மிரட்டல் விடுவது போல் தங்களைப்பற்றி எழுதிய எழுத்தாளனை பொய் வழக்கு தொடுத்து சிறையில் அடைத்திருக்கும் அதிகார வர்க்கத்திற்கும் இதற்கு துணை போன காமராஜ் என்ற நக்கீரன் துணை ஆசிரியருக்கும் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ஆனா யார் யாரெல்லாம் நெற்றிக்கண் திறக்கலாம்னு நாங்க தான் முடிவு பண்ணுவோம்) எனது கடுமையான கண்டனங்கள்

யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? என்று கண்டும் காணாமல், ஒரு சக எழுத்தாளனுக்கு நடக்கும் அக்கிரமத்தை தட்டி கேட்காமல், நடிக நடிகையரை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் ஊடகத்துறைக்கும் எனது கண்டனங்கள்

இப்படியெல்லாம் நடக்கும்னு எதிர்பார்த்திருந்தாலும் ஊழல் அதிகாரிகளை தோலுரிக்க தயங்காத சவுக்கு சங்கரின் நேர்மைக்கும் துணிவிற்கும் ஒரு ராயல் சல்யூட்

செவ்வாய், ஜூலை 13, 2010

விந்தை மனிதர்கள் - டூம்

சில வருடங்களுக்கு முன்னால் ஒரு ரமதான் மாதம் காலை வேளையில், அவசர அவசரமாக என் அலுவலக அறைக்குள் வந்து கதவை சாத்தினான் டூம் - டுனிஷியா நாட்டினன், இயற்பெயர் எனக்கு தெரியாது. ஏனெனில் அனைவரும் அவனை டூம் என்றே அழைப்போம்.

தனது துப்புரவு கருவிகளை ஒரு ஒரமாக வைத்து விட்டு என் அருகில் வந்து காலை வணக்கம் கூறிவிட்டு அலமாரிக்கு அருகில் மறைவாக நின்றுக்கொண்டு தான் அணிந்திருந்த வேலை அங்கியின் பாக்கெட்டிலிருந்து குருவாசென் (croissant) என்ற காலை உணவு ரொட்டியை அவசரமாக எடுத்து கடிக்க தொடங்கினான்.

அவ்வப்போது வாசலை நோக்கி பதட்டத்துடன் பார்த்துக்கொண்டான்.

நான் என்னிடமிருந்த ஒரு தண்ணீர் பாட்டிலை அவனுக்கு நீட்டி விட்டு, அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

எனக்கு இந்த நிகழ்வுகள் எல்லாம் நன்றாக பழக்கமாகி யிருந்தது. ஆனால் அவனுக்கோ, முதல் நாளில் இருந்த பதட்டம் இன்று வரையில் அப்படியே இருக்கிறது.

இரண்டு மூன்று குருவாசென்களை (croissant) சாப்பிட்டு விட்டு, பாதி பாட்டில் நீரையும் குடித்து விட்டு, பதட்டம் தணிந்தவனாக என் அருகில் வந்தவன்,

"நான் தினமும் இங்கு வருவதால் உன் வேலைகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படுகிறதா?" என்றான்.

நான், "இல்லை!" என்று சொல்லி முடிப்பதற்குள்,

"இங்கு நடந்ததை யாரிடமும் கூறிவிடாதே!" என்று வழக்கம்போல் கெஞ்சலுடன் சொல்லிவிட்டு, கதவைத் திறந்து தனது துப்புரவு பணியிணை கவனிக்க தொடங்கினான்.

தினமும் இதே கதைதான் சில நாட்கள் மதியவேளைகளிலும் 'சாண்ட்விச்'
உடன் ஆஜராகிவிடுவான்.

எங்கள் அலுவலக உணவகத்தின் சீப் குக் (chief cook) மொரொக்கோ நாட்டை சேர்ந்தவன். மாலை வேளைகளில் உணவக நிர்வாகம் முழுவதும் அவன் கையில் தான். அதனால் ரமதான் மாதத்தின் மாலை நேரத்தில் நோன்பு திறக்க அனைத்து ஏற்பாடும் அங்கு செய்து வைக்கப்படும்.

பேரீச்சம்பழம், தண்ணீர் என்றும், நோன்பு துறந்தவுடன் சூடான சூப், பிறகு சாப்பாடு என்றும் அனைத்திற்கும் அவனே பொறுப்பேற்றுக்கொள்வான்.

தவிர அந்த நேரம் மற்றவர்களின் உணவு நேரம் இல்லை என்ற படியால் சொற்பொழிவு கூட சில சமயம் நடக்கும் ஆக மொத்தம் அந்த இடமே சின்ன மசூதி போல காட்சி அளிக்கும்.


அன்றைய தினம், "ஐய்யா நான் களைச்சிட்டேன் எனக்கு புத்துணர்வு கொடு" என்று மூளை கதறிய பிறகுதான் மணியை பார்த்தேன் ஆறை தாண்டியிருந்தது. வழக்கமாய் நாலு நாலறைக்கு குடிக்கும் காப்பியும், அடிக்கும் தம்மும் வேலை மும்முரத்தில் மறந்து போயிருந்தன. சரி யென்று, உணவகத்த்தை ஒட்டி உள்ள காபி மெஷினை நோக்கி நடந்தேன்.

காபியை எடுத்துக்கொண்டு திரும்பியவனை உணகத்திலிருந்த வந்த சப்தமான குரல்கள் தடுத்து நிறுத்தியது.

என்னதான் நோன்பு துறக்கும் நேரமேயானாலும், இந்த சப்தங்கள் அசாதாரணமாக மனதிற்கு பட்டது.

ஓங்கி ஒலித்த குரல்களில் டூமின் குரலும் ஒன்றாக இருந்ததால், உணவகத்தை நோக்கி என் பார்வை அனிச்சையாக திரும்பியது.

ஒரு பையன் தலை குனிந்தபடியே நின்றிருக்க அவனை மூன்று நான்கு பேர்கள் வார்த்தைகளால் வறுத்தெடுத்து கொண்டிருந்தனர்.அப்படி ஆக்ரோஷப்பட்டவர்களில் டூம் முதன்மையானவனாக தெரிந்தான்.

அவர்கள் அரபு மொழியில் கத்திக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது பிரெஞ்சு மொழியையும் உபயோகப்படுத்தியதால் என்னால் நடந்ததை ஓரளவு ஊகிக்க முடிந்தது என்றாலும், அங்கிருந்த ஒரு அரபுக்காரனிடம் கேட்டு விஷயத்தை நிச்சயப்படுத்திக்கொண்டேன்.


மேட்டர் இதுதான் :

படித்துக்கொண்டே, விடுமுறையில் வேலை பார்க்கும் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த அந்த அரபு பையன், நோன்பை கடவுளுக்கு பயந்து முழுமையாக எடுக்காமல், நோன்பு துறப்பதற்கு 2 மணி நேரம் முன்னரே, பசி தாங்காமல் ஒரு பழத்தை திண்ண, அந்த நேரம் பார்த்து அந்தப்பக்கம் வந்த, 'மார்க்க பெரியவர்' என்று எங்கள் அலுவலகத்து முஸ்லீம்களால் அழைக்கப்படும் டூம் என்றவர், அவனை கையும் களவுமாக பிடித்து, சபைக்கு இழுத்து சென்று, தானும் கண்டித்து, மற்றவர்களையும் கண்டிக்க வைத்து தன்னுடைய இறைவனுக்கு நன்றி விசுவாசத்தை காட்டிக்கொண்டார்.




டிஸ்கி : அன்றிலிருந்து எனது அலுவலக அறைக்கதவு உட்பக்கமாக சாவி போட்டு பூட்டப்பட்டது. தட்டி அனுமதி கேட்ட டூம் விற்கு அனுமதி மறுக்கப்பட்டது.