இன்று ஒரு குறள் !

சனி, ஆகஸ்ட் 16, 2008

இந்தியாவின் 62வது சுதந்திரதினம்













இந்தியாவின் 62வது சுதந்திரதினம், நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

செங்கோட்டையில் பிரதமராலும் மாநில தலைநகரங்களில் முதல்வர்களாலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின செய்தி உரையாற்றப்பட்டது.

மாணவ மாணவியர்கள் சட்டையில் கொடியும் வாயில் இனிப்புமாக கொண்டாட்டங்களை கண்டு ரசித்தார்கள்.

பெரும்பாலரோ ஏதோ விடுமுறை கிடைத்தது என நாள் முழுதும் ஓய்வெடுத்தபடி தொலைக்காட்சி முன் அமர்ந்து தங்கள் அபிமான நடிகர் நடிகையினரின் பேட்டி கண்டு புளகாங்கிதம் அடைந்து மகிழ்ந்தனர்.

உளவுத்துறையினரும், காவல் துறையினரும் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் அனைத்தும் நல்ல முறையில் நடந்த நிம்மதியுடனும்,
அடுத்து வரப்போகும் ஜனவரி 26 குடியரசு தின விழா நல்ல முறையில் நடக்க வேண்டுமே என்று மனதில் ஒரு ஓரத்தில் அரும்புவிட ஆரம்பித்த சிறு கவலையுடனும் உறங்கப்போயினர்.

இப்படியாக உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக தேசத்தின் முக்கிய தேசியத்திருநாள் இனிதே கழிந்து போனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக