இன்று ஒரு குறள் !

வியாழன், ஏப்ரல் 03, 2008

திராவிடன் என்று சொல்லாதே ! தமிழன் என்று சொல் !!

திராவிட முன்னேற்ற கழகம்; அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்; மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்; தேசிய முன்னேற்ற திராவிட கழகம்; ......................

அப்பப்பா! எத்தனை திராவிடக்கட்சிகள்தான் நம் தமிழ் நாட்டில். அதுவும் தமிழ் நாட்டின் மாநில கட்சிகள். சில கட்சிகள் பேருக்கு இன்னும் சில மாநிலங்களில் ருப்பதனால் அவைகளை விட்டு விடுவோம். ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் இருக்கும் கட்சிகளும் எதற்கு திராவிட பெயர் வைக்க வேண்டும்? பெரியார் மீதுள்ள பற்றினால், அவர் கண்ட கழகத்தின் பெயரைச்சார்ந்து வைக்கிறர்களா? அல்லது ஃபேஷனுக்கு வைக்கிறார்களா? எப்படியாயினும் இனியாவது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஃபேஷனுக்கு பெயர் வைப்பவர்களை பற்றி ஒன்றும் சொல்லத்தேவையில்லை.
ஏனெனில் அவர்கள் கொள்கைப்பற்றி கவலைப்படப்போவதிலை. மற்ற கட்சிகள்
தமிழன் முன்னேற்ற கழகமாக மாறினால் இவர்களும் மாறிவிடுவார்கள் தான்.

ஆனால் பெரியார் மீதுள்ள பற்றினால் அப்படி பெயர் வைப்பவர்கள் சில விஷயங்களை கொஞ்சம் சிந்தித்தால் நல்லது.

பெரியார் அவர்கள் தனி திராவிட நாடு கோரிக்கை வைத்து போராடிக்கொண்டிருந்ததால் தான் கண்ட இயக்கதிற்கும் அந்த பெயர் வைத்தார். தவிர ஆன்மீகக்கதைப்பேசி, நம் இனத்தை அடிமையாக்கி ஆண்டுக்கொண்டிருந்த ஆரிய இனத்திலிருந்து நம் இனத்தை பிரித்து காட்டவும் அப்படி பெயர் வைத்து இருக்கலாம்.

ஆனால் இன்றைய நிஜங்களை எண்ணிப்பாருங்கள். நம் திராவிட சகோதரர்கள் நம்மை கொல்லாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது. தவிச்ச வாய்க்கு தண்ணி கேட்டால் அரிவாளை எடுத்து நம் கழுத்தை வெட்டி நம் குருதியையே தருகிறான் ஒருவன்..

சரி ஒருத்தன் தான் சுய நலவாதி மற்றவன் அப்படி இல்லையே என்று நம்மளை நாமே ஏமாற்றிகொள்ள முடியாது.

முல்லைப்பெரியாறாயிருக்கட்டும், பாலாறாயிருக்கட்டும், காவேரியாய் இருக்கட்டும் எல்ல இடத்திலேயும் நமக்கு ஏமாற்றம்தான். ஒருத்தன் வெட்றான், ஒருத்தன் உதைக்கிறான், ஒருத்தன் குத்துறான். ஆனால் நாம மட்டும் அனைவரும் நம் திராவிட சகோதரர்கள் என்று சகித்துக்கொண்டும், விட்டு கொடுத்துக்கொண்டும் இருக்கவேண்டும்.

இவனுங்க மதிக்கிற மூத்த நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து மீட்பதற்கு மட்டும் தமிழன் தேவை. அப்புறம் தமிழன் எதிரிதான்.

இதுக்காகவே ஒரு தாதா இருக்கிறான் வாட்டாள் நாகராஜ் என்று. எப்படா ஏதாவது பிரச்சினை வரும் எதிர் வரும் தமிழனை எல்லாம் தாக்கலாம்னு காத்துகிட்டு ஒரு ரவுடிக்கும்பலோட சுத்திக்கிட்டு இருப்பான், நாதாறி பய புள்ள.

நாம வந்தாரை வாழ வச்சிட்டு நமக்கு வாழ்வு தருகிற தண்ணி இல்லாம இவனுங்களைப்பார்த்து ஏங்கி நிக்கனுமா?

பக்கத்து வீட்டுக்காரனிலிருந்து சினிமா நடிகன், அரசியல்வாதிவரை இவன் தெலுங்கனா, இவன் மலையாளியா, இவன் கன்னடத்தானா என்று சில ஆண்டுகள் முன்பு வரை வேறுபடுத்தி பார்க்கத்தெரிந்திராத நமக்கும் அந்த வேறுபாடு பார்க்கும் பழக்கத்தை கற்றுத்தந்ததே இவனுங்க சுயநலமும், இனத்துவேஷமும், தமிழர்க்கெதிரான வன்முறையும் தானே.

நல்லவேளை, பெரியார் ஆசைப்பட்டபடி தனி திராவிட நாடு கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் கொஞ்ச நாளிலே இந்த கன்னடத்தானுங்க தனி நாடா பிரிஞ்சிப்போய், பாகிஸ்தான் இந்தியாவுக்கு கொடுக்கிற குடைச்சலை இவனுங்க நமக்கு கொடுத்திருப்பானுங்க.

இந்த விஷயத்திற்கெல்லாம் எப்பொழுது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறோம்.

அதை இப்போதே தொடங்கினால் என்ன? இனி நாம் திராவிடன் என்று சொல்லிக்கொள்ளாமல் தமிழனென்று அடையாளம் கூறிக்கொள்வோம். பிறகு பக்கத்து மாநிலக்காரன் நம்மிடம் வாலாட்டினால் சகோதரக்குற்றவுண்ர்வு கொள்ளாமல் அவன் வாலை ஒட்ட நறுக்கலாம்.

பாரதி இப்போது இங்கு இருந்திருந்தால் இப்படியும் பாடியிருப்பானோ என்னமோ,

என்று தணியும் எங்கள் தமிழனின் தாகம்!
என்று மடியும் எங்கள் திராவிட மோகம்!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக