இன்று ஒரு குறள் !

திங்கள், டிசம்பர் 31, 2012

பெண்கள், வன்புணர்வு, பர்தா - நாம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்



நாம் எங்கு போய்க் கொண்டிருக்கிறோம். 21 ம் நூற்றாண்டிலிருந்து 22 ம் நூற்றாண்டை நோக்கியா இல்லை மீண்டும் கி.மு.வை நோக்கியா.

அறிவு ஜீவிகளாக கருதிக் கொண்டு சிலர் உதி்ர்க்கும் கருத்து்கள் அப்படித் தான் இருக்கிறது


 
இஸ்லாமிய பெண்கள் போல பெண்கள் அனைவரும் பர்தா அணிய வேண்டும் என்ற கருத்து முத்தை உதிர்த்திருப்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை நித்தியானந்தாவின் சொர்க்கத்தில் எல்லையற்ற இன்பங்களில் மூழ்கி கிடந்தவர். அதற்கு பலனாக இளைய ஆதின பதவியையே விலையாக தந்தவர்.

 
 இவரெல்லாம் சமுதாய நலனை பற்றி பேசவில்லை என யார் அழுதது.


இதைப் போன்ற இன்னொரு கருத்து முத்தை Dr. Anita Shukla என்ற விஞ்ஞானி, தான் ஒரு பெண் என்பதையும் மறந்து விட்டு கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.

‘Women instigate men to commit such crimes'. She accused the victim of being insensible as she was out of her house after 10 pm. Shukla claimed that if a girl wanders late at night with her boyfriend; such situations are bound to happen.


அதாவது   பாதிப்புக்கு உள்ளான அந்த பெண் இரவு பத்து மணிக்கு மேல் ஏன் வீட்டை விட்டு வெளியில் தன் ஆண் நண்பருடன் சுற்றி திரிய வேண்டும்.
 
அதனால் தான் இப்படி பாலியல் பலாத்காரத்திற்கு பலியாக நேரிட்டது.

அதாவது இரவில் வெளியில் செல்லும் உரிமை பெண்களுக்கு கிடையாது.
 
ஆண்கள் மட்டுமே இரவில் ஊர் சுற்றலாம், வீதியில் தண்ணி அடிக்கலாம் எதிரில் ஏதேனும் பெண்கள் தென்பட்டால் தங்கள் காம வெறியை தீர்த்து கொள்ளலாம்.
 
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பெண்ணின் குடலை வெளியில் உருவி போடலாம்.
 
ஆஹா என்னே சமத்துவம் என்னே சனநாயகம்.

மேலும் அந்த விஞ்ஞானி கூறுகிறார்

‘The victim should have surrendered when surrounded by six men, at least it could have saved her intestines'

அதாவது, அந்த பெண் தன்னை ஆறு பேர்  சூழ்ந்து பலாத்காரம் செய்ய முற்படுகையில் அவர்களுக்கு அடங்கி ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் தனது குடலை காப்பாற்றியிருக்கலாம்

ஆஹா என்னே ஒரு க(பெ)ண்ணியமான கருத்து. இதையே தான் தான் பெற்ற பெண்களுக்கும் சொல்லி வளர்ப்பாரோ என்னமோ.
 
அதாவது காஞ்சனா என்ற படத்தில ஸ்ரீமன், ஆவியை பார்க்கும் போதெல்லாம் வாய் கோணி கொண்டே படுத்து கொள்வார். அதைப் போல, எவனாவது காம பார்வை பார்த்து கொண்டே தன்னை நெருங்கினால்  பெண்களும் அவனுக்கு ஒத்துழைக்க தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என எதிர் பார்க்கிறாரோ இந்த மனிதாபிமானம் அற்ற பெண் விஞ்ஞானி.

 
 

குற்றம் செய்தவனை விட்டு விட்டு பாதிக்கப் பட்டவர்களுக்கே தண்டனை தரும் கூட்டம் இந்த கூட்டம்.
 
இவர்கள் சொல்வதை எல்லாம் நடைமுறைப் படுத்த ஆரம்பித்தால் எங்கே போய் நிற்கும் என் பாருங்கள்.
 .
இரவில் வெளியே போகாதே.
 
வேலை செய்வதால் வெளியே போக வேண்டிய சூழ் நிலை உள்ளதா -வேலைக்கே போகாதே.
 
பகலிலும் பாலியல் பலாத்காரம் நடந்து விட்டால் -
பகலிலும் வெளியே போகாதே
 
பள்ளிகூடம் போக வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால் - 
நீ படிக்கவே வேண்டாம்
 
கண்டிப்பாக வெளியில் சென்று தீர வேண்டிய நேரங்களில் - ஆண் துணையோடு,  ஜமுக்காளத்திற்குள் உன் உடலை ஒளித்துக் கொண்டு போ
 
 
பெற்றவர்கள் பாது காப்பில் அடைந்து கிட - திருமணம் வரை.
 
பின் கணவனுக்கு சமைத்து போடு, அவனது பாலியல் தேவைகளை தீர்த்து வை.
 
பின் பிள்ளைகளை பெற்று, வளர்.
 
பெண் பிள்ளை என்றால் அவளிடம்,   நீ பிறந்ததே, உன்னை கட்டிக்கப் போற ஆணுடைய பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யவே என சொல்லி கொடுத்து வளர்.
 
இதுக்கு ஏன் உனக்கு படிப்பு, வேலை, சுய மரியாதை எல்லாம்.

                                    



 மொத்தத்தில் பெண்களை பார்த்து இப்படி சொல்லி விடலாம் :

காப்பி மெஷின், வாஷிங்மெஷின், தையல் மெஷின் இவையெல்லாம் கேட்கிறதா எனக்கு படிப்பு வேண்டும் வேலை வேண்டும் சுயமரியாதை வேண்டும்  என்று.
 
ஆனால் ஆண்களின் செக்ஸ் மெஷின் ஆன நீ மட்டும் ஏன் இதை எல்லாம் எதிர் பார்க்கிறாய்.

15 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. முகவரி தவறி வந்துள்ளீர்கள், இது மத பதிவு அல்ல.

      மற்ற மத ஓட்டைகளை நோண்டும் முன் தன் சொந்த மத அல்லது மார்க்க சொத்தைகளையும் உண்மையாக சிந்திக்கவும்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வாங்க சார்,

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
    2. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் சார்

      நீக்கு
  3. கற்பழித்தவர்களுக்கு வழங்கப்படும் எங்கள் தெய்வ தீர்ப்பு.!


    படியுங்கள்.உடம்பெல்லாம் பெண் குறியாக இந்திரன் என்ன செய்தான்? .


    பெண்ணை ஆண் எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தன் போகத்துக்காக இஷ்டப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற போதனையையும் தெய்வங்களிடமிருந்தே ஆரம்பித்து விட்டனர்.

    படியுங்கள் தன்னுடைய"அதை" மட்டும்அனுப்பி இல்லறசுகம்!!!. முடியுமா உங்களால்?

    .

    பதிலளிநீக்கு
  4. Dr. Anita Shukla
    யார் இந்த கோமளி. சவூதி பணம் இவருக்கு வழங்கபடுகிறதோ?

    நண்பா நீங்க தந்த படங்களில் கடைசி படம் கறுப்பு வெள்ளை படம் இருக்கே அது தான் தற்போதைய நவீனகாலத்திலும் பெண்கள் மீது கொடுமைகள் செய்ய காரணமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே,

      Dr.Anita Shukla ஒரு படித்த முட்டாள் என்பதில் சந்தேகமில்லை. சில அறிவுஜீவிகள் சில சமயங்களின் இப்படி தான் ஆகி விடுகிறார்கள். மற்றபடி இவருக்கு எங்கேயிருந்தாவது பணம் வருவது பற்றி எல்லாம் எமக்கு தெரியாது.

      //நண்பா நீங்க தந்த படங்களில் கடைசி படம் கறுப்பு வெள்ளை படம் இருக்கே அது தான் தற்போதைய நவீனகாலத்திலும் பெண்கள் மீது கொடுமைகள் செய்ய காரணமானது//

      மீண்டும் இருண்ட காலத்திற்கு அழைத்து செல்லும் உத்தியாக பட்டதால் தான் கடைசி படம் கருப்பு வெள்ளை படமாக இருக்கிறது

      ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே!

      நீக்கு
  5. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
    நன்றி குட்டன்

    பதிலளிநீக்கு
  6. அதாவது பாதிப்புக்கு உள்ளான அந்த பெண் இரவு பத்து மணிக்கு மேல் ஏன் வீட்டை விட்டு வெளியில் தன் ஆண் நண்பருடன் சுற்றி திரிய வேண்டும். ///

    ச்சே என்ன ஒரு அடக்குமுறையா சிந்தனை?

    சாட்டையடியான உங்கள் பதிவு - விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மணி!

      மத பழமைவாதிகளின் பிற்போக்கு சிந்தனையே, பெண்ணடிமையை வலியுறுத்தும் ஆணாதிக்க சிந்தனை தானே

      நன்றி மணி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

      நீக்கு
  7. பெண்ணடிமைத்தனத்தை எல்லா மதவாதிகளும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள்...பல்லாயிரம் ஆண்டுகளாக தொடரும் கொடுமை உடனே போகாதுதான் !

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான் ! பெண்ணடிமைத்தனம் இல்லாத மதமே இல்லை என் சொல்லிவிடலாம் ஆனால் விகிதாசாரத்தில் வித்தியாசம் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண ஓட்டிற்கும் மிக்க நன்றி பகவான்ji

    பதிலளிநீக்கு