இன்று ஒரு குறள் !

ஞாயிறு, டிசம்பர் 29, 2013

காரைக்காலில் கொடூரம் பெண்ணை கடத்தி பலாத்காரம் - Karaikal Gangrape




திருவாரூரைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணை புதுச்சேரியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதாகியுள்ள 12 பேரில் 2 பேர் ஏற்கனவே பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி சிறை சென்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

 இதில் நாசர் என்பவர், திமுக எம்.எல்.ஏ. நஜீமின் உறவினர் என்று தெரிகிறது. இந்த நாசர், கடந்த 1999ம் ஆண்டிலேயே ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி 3 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவராம். ஆனால் பின்னர் அப்பீலுக்குப் பின்னர் இந்தத் தண்டனை 18 மாதமாக குறைக்கப்பட்டதாம்.

புதுச்சேரிக்கு தனது தோழி மற்றும் அவரது காதலருடன் பாதிக்கப்பட்ட பெண் சுற்றுலா வந்திருந்தபோதுதான் இந்த கொடுமையை சந்திக்க நேர்ந்தது. 

அடுத்தடுத்து இரண்டு குழுக்களால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரம் செய்வது தொடர்பாக இரண்டு குழுக்களிடையே மோதல் மூண்டபோது ரோந்து போலீஸாரிடம் அவர்கள் சிக்கினர். இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அந்தப் பெண் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மொத்தம் 15 பேர் இந்த அக்கிரமச் செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் 12 பேர் தன்னை பலாத்காரம் செய்ததாக அப்பெண் கூறியுள்ளார். 

முதலில் 3 பேர் சேர்ந்து அப்பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம் செய்து விடுவித்துள்ளனர். பின்னர் இன்னொரு குழு வந்து அவரை பலாத்காரம் செய்து சீரழித்து விட்டது. கிட்டத்தட்ட 6 மணி நேரம் இந்த மனித மிருகங்களிடம் சிக்கித் தவித்துள்ளார் அப்பெண். 


புதுச்சேரி பலாத்கார பயங்கரம்.. 2 குற்றவாளிகள் ஏற்கனவே பலாத்கார வழக்குகளில் சிக்கியவர்கள்! Posted by: Sudha


 இந்த நாய்களை என்ன செய்தால் தகும். இந்த நிகழ்வு நடந்து அய்ந்து நாட்கள் ஆகியும் பதிவுலகில் யாரும் கண்டிக்காமல் விட்டது எப்படி? டெல்லியில் நடந்தால் மட்டும் தான் குமுறி கொந்தளிப்போமோ.
இதில் வேதனை என்ன என்றால் சாதி மத பேதம் இன்றி மக்களின் நற்பெயரை சம்பாதித்து வைத்து இருக்கும் தொகுதி எம் எல் ஏ திரு நாஜிம் அவர்களின் உரவுக்காரனும் ஒருவனாம் இந்த நாய் கூட்டத்தில். அவருக்கு இது எவ்வளவு அவமானம்.



பின் குறிப்பு   : இதில் புதுச்சேரியில் என்ற இடத்தில் எல்லாம் காரைக்காலில் என்று படிக்கவும். ஊர் பெயர் ஏன் மாற்றி எழுதினார்கள் என் தெரியவில்லை

 நன்றி  :
தட்ஸ்டமில் மற்றும் http://www.newindianexpress.com/

7 கருத்துகள்:

  1. ivarkalukku munnaadi konjam kat panninaal podhadhu,fullaa kat pannidanum

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்களில் முன் பகுதி கட் பண்ணியவர்கள், பெரும்பான்மையானவர்கள் ஆக இருந்த போதிலும் கட் பண்ணாதவர்களும் இருப்பது குறிப்பிட தக்கது. அதனால் இதனை ஒரு குறிப்பிட்டவர்களின் குற்றமாக நான் பார்க்கவில்லை. மொத்தத்தில் மனித மிருகங்கள்.
      தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே !

      நீக்கு
  2. பயங்கர கொடுமை.
    //இந்த நாசர் கடந்த 1999ம் ஆண்டிலேயே ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி 3 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவராம். ஆனால் பின்னர் அப்பீலுக்குப் பின்னர் இந்தத் தண்டனை 18 மாதமாக குறைக்கப்பட்டதாம்//
    பயங்கர குற்றம் செய்தவர்களை வெளியே சுதந்திரமா விடுவதால் மீண்டும் பயங்கரமே நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வேக நரி சார்,
      பார்த்திர்ர்களா, இவன் நன்னடத்தை காரணமாக தண்டனை குறைக்க பெற்று வரவில்லை என்பதை நிரூபித்திருக்கிறான். வேறு என்ன காரணத்தினால் என்று கேட்கிறீர்களா .தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் தெரியும் இவன் தொகுதி திமுக எம் எல் ஏ நாஜீமின் உறவினனாம்

      நீக்கு
  3. நண்பரே இப்போ தான் ஒன்றை கவனித்தேன். கொடுமைக்கெதிரா ஒரே ஒரு பதிவு தான் நீங்க 2013 ல் எழுதியுள்ளிங்க.
    2014 நிறைய எழுதணும் எழுத எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் நண்பரே! வேலைப்பளு, குடும்ப பிரட்சினை போன்ற பல சுமைகள் நேரங்களை விழுங்கி விடுகின்றன். தங்களின் ஆசி மற்றும் ஆசைப்படியே வரும் 2014ம் ஆண்டில் அதிகமாக எழுத முயற்சிக்கிறேன். உங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி!

      நீக்கு