இன்று ஒரு குறள் !

திங்கள், ஏப்ரல் 11, 2011

யாருக்கு உங்கள் ஓட்டு - ஒரு நிமிடம் சிந்திப்பீர்






யார் நம்மை ஆளலாம்

காமராஜர், கக்கன் போன்ற தன்னலம் கருதாது மக்கள் சேவையே மகேசன் சேவை என இருப்பவர்கள் .

அப்படி யாரும் தற்சமயம் இங்கில்லை. இனி ஏதாவது ஒரு தேவகுமாரன் வானிலிருந்து இறங்கி வந்தால்தான் உண்டு.

அதுவரை எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என் தேர்ந்தெடுப்பதே நமக்கு கிட்டிய வாய்ப்பு

யாருக்கு ஓட்டு போடக்கூடாது

எக்காரணம் முன்னிட்டும் ஈழத்து தமிழ் இன ஒழிப்பு கொலைகாரன் காங்கிரஸுக்கு கூடவே கூடாது


அடுத்து

மாநிலத்தை தன் குடும்பத்திற்கு குத்தகை விட்டு, தன் குடும்பத்தினர்களை சிற்றரசர்களாய் முடி சூட்டியவருக்கு,

மூத்தவர் பிள்ளைகள் அனுபவிக்கிறார்களே என துணைவியார் புழுங்கநான் வளர்கிறேனே மம்மிஎன மகள் விசுபரூபமெடுத்தன் விளைவு நாட்டுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நட்டம் - இவர்களை அனுமதித்த குடும்ப தலைவருக்கு

மாநிலத்தை இருளாக்கியவருக்கு

ஊடத்துறையை போலவே திரைப்படத்துறையையும் கபளீகரன் செய்தவருக்கு

ஒரு குடிகார தலைமுறையையே உருவாக்கி தந்தவருக்கு

ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் எனக்கூறி ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருப்பவருக்கு

அயல் நாட்டு ராணுவ அராஜகத்தால் 550 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது கண் காது பொத்தி இருந்தவருக்கு

கூப்பிடு தூரத்தில் கொத்து கொத்தாக நம் சகோதரர்கள் கொலையுண்டானபோது கொலையாளி காங்கிரஸுக்கு வாய் பொத்தி சேவகம் செய்தவருக்கு


யாருக்கு ஓட்டு போடலாம்

சுயேட்சையாய் நிற்கும் நல்லவர்களுக்கு

புதிதாய் களத்தில் நிற்கும் தேமுதிகவினருக்கு

ஊழலின் கறை படியாமல் எளிமையாய் வாழும் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு
………………………………………..

ஆனால் தொங்கு சட்டசபை வராமல் குதிரை பேரத்திற்கு இடம் கொடுக்காமல் உடனடி இன்னொரு தேர்தல் வேண்டாமென்றால் அதிமுக கூட்டணிக்கே வாக்களியுங்கள்


ஏன் அதிமுக கூட்டணி

வேறு வழியில்லை மு்ன்பே சொன்னது போல் எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி கணக்குதான்


திமுகவைவிட அதிமுக எந்த விதத்தில் உயர்ந்தது

இன்றைய நிலைவரை ஜெஜெ யின் பெரிய கொள்ளை 60 கோடி கலைஞர் தரப்போ 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி

ஈழப்பிரச்சினையில் ஜெஜெ எதிரி கலைஞர் துரோகி எதிரியை விட துரோகிதான் ஆபத்தானவன்




மீண்டும் திமுக வந்தால்

ஸ்பெக்ட்ராம் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது. மாறாக  தா.கிருஷணன், தினகரன் ஊழியர்கள் வழக்குகள் போல அந்தரத்தில் மறைந்து விடும்

ஊடத்துறை, திரைப்படத்துறை போல இன்னும் என்ன என்ன துறைகள் அவர் குடும்பத்தினரால் கபளீகரம் செய்யப்படுமோ.

ஏற்கனவே மகள் வளர்ந்து விட்டேன் என்று காட்டவே நாடு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நட்டம் கண்டது .இன்னும் 5 வருடத்தில் வளர்வதற்குஅவரின் பேரன் பேத்திகள் தயார் அதுக்கு இன்னும் எத்தனை கோடி கோடி கோடி யோ



அதிமுகவும் மீண்டும் ஊழலில் இறங்கினால்

இருக்கட்டுமே அடுத்த 5 வருசத்தில் இந்த திருடன் வரட்டும்னு கலைஞருக்காக கொரல் கொடுப்போம்


என்னதான் தொழில் கொள்ளையாய் இருந்தாலும்
மொறைவாசல் முக்கியமில்லையா கண்ணு !
அட என்ன நாஞ்சொல்றது !!

8 கருத்துகள்:

  1. என்னபா ஆளில்லாத கடையில டீ ஆத்திக்கினு இருக்கே

    ஆனாலும் நல்லாதான் சொல்லிக்கீறே

    வர்ட்டா

    பதிலளிநீக்கு
  2. அன்பு நண்பர் விஷ்ணு அவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் அருமை , ஆனால் உங்களை போன்ற அதிகம் படித்த , உலக ஞானம் உள்ள , அதிபுத்திசாலி மேதாவி அறிவிஜீவிகள் , இந்த ஊழல் சாக்கடையை இறங்கி சுத்தம் செய்ய தயாரா ? , இந்த ஊழல், கொள்ளைக்காரன் , திருடன் ,ரவுடி கருணாநிதி ஆட்சியை அகற்றி விரட்ட நான் ரெடி , அப்புறம் இந்த நாட்டில் நல்ல ஆட்சி அளிக்க , மக்கள் கடனில்லாமல் வாழ, பசி பஞ்சம் நோய் இல்லாமல் வாழ , அணைத்து பொருட்களும்
    இப்போது உள்ள விலையை விட குறைவாக பெற்று வாழ , நாட்டில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் நடக்க , அணைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சம் இல்லாமல் நடக்க , அனைவர்க்கும் நல்ல தரமான கல்வி , மருத்துவம் , வேலை கிடைக்க
    யார் வந்தால் நல்லது , அப்படிப்பட்ட ஒரு கட்சி எது , அப்படிப்பட்ட நல்ல ஆட்சியை நடத்தும் உத்தம தலைவர் யார் என்று தயவு செய்து தகுந்த விளக்கத்துடன் , தகுந்த ஆதாரத்துடன் என்னை போன்ற முட்டாள் பாமரனுக்கு சொன்னால் , இந்த ஊழல் கருணாநிதியை வீட்டுக்கு மட்டும் அல்ல , எகிப்து போன்று இந்த நாட்டை விட்டே அனுப்ப தயார் .
    உங்களால் இந்த நாட்டை நல்வழி படுத்த முடியுமா ?
    ஒரு நல்ல தலைவரை அடையலாம் காட்ட முடியுமா ?
    அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவரின் தொண்டர்களை இந்த உலகத்திற்கு நீங்கள் காட்டுவீர்களா ?

    நாங்கள் உங்களைபோல் ஞாயம் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கும் அறிவுஜீவிகள் அல்ல , உங்களைவிட நன்றாக யோசித்து , வேறு நல்ல வழி இல்லாததால் , இப்போது இந்த நாட்டில் உள்ள திருட்டு கட்சியில் , திருட்டு தலைவர்களில் , யார் குறைவாக கொள்ளையடித்து அதே சமையம் ஓரளவிர்ககவாவது மக்களுக்கு நல்லது செய்வதால்தான் கருணாநிதியை ஆதரிக்கிறோம் புரிந்துக்கொண்டு, இந்த மாதிரி வெட்டி வியாக்கியானம் பேசிக்கொண்டு இர்ராமல் , ஒன்று நல்ல தலைவரை , கட்சியை அடையாளம் காட்டுங்கள் அல்லது இந்தமாதிரி வாய்க்கு வந்ததை பேசி , கைக்கு வந்ததை எழுதுவதை இதோடு தயவுசெய்து நிறுத்திவிடுங்கள் .

    பதிலளிநீக்கு
  3. @புதிய கோணங்கி

    எல்லாம் உங்களுக்காகத்தான் தல.
    உங்களை தூரத்தில் பார்த்ததுமே டீ ஆத்த ஆரம்பிச்சிட்டேன்
    உங்களுக்கு தான் over சூடு ஆவாதே :)

    பதிலளிநீக்கு
  4. //jothi said...
    அப்புறம் இந்த நாட்டில் நல்ல ஆட்சி அளிக்க , மக்கள் கடனில்லாமல் வாழ, பசி பஞ்சம் நோய் இல்லாமல் வாழ , அணைத்து பொருட்களும்
    இப்போது உள்ள விலையை விட குறைவாக பெற்று வாழ , நாட்டில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் நடக்க , அணைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சம் இல்லாமல் நடக்க , அனைவர்க்கும் நல்ல தரமான கல்வி , மருத்துவம் , வேலை கிடைக்க
    யார் வந்தால் நல்லது , அப்படிப்பட்ட ஒரு கட்சி எது , அப்படிப்பட்ட நல்ல ஆட்சியை நடத்தும் உத்தம தலைவர் யார் //

    அண்ணே ஜோதி அண்ணே,
    அப்படின்னா இப்ப நடக்கிற ஆட்சியிலே இதெல்லாம் கிடைக்குதுன்னு சொல்றீங்களா
    எப்படி எப்படிண்ண் இது

    பதிலளிநீக்கு
  5. //jothi said...
    ஒரு நல்ல தலைவரை அடையலாம் காட்ட முடியுமா //

    இப்ப அவரைத்தாண்ண வலை வீசி தேடிட்டிருக்கோம்

    பதிலளிநீக்கு
  6. //jothi said...

    இப்போது இந்த நாட்டில் உள்ள திருட்டு கட்சியில் , திருட்டு தலைவர்களில் , யார் குறைவாக கொள்ளையடித்து//

    எதுங்க்ணா, 1700000000000 ரூபாய் உங்களுக்கு குறைவாணா.
    சரிங்க்ணா இதுக்கு மேலே உங்கள மாதிரி இங்கிலாந்து அரச குடும்பத்து
    மெம்பர் கிட்ட எல்லாம் பேச முடியாதுங்ணா

    பதிலளிநீக்கு
  7. இதுக்கு அப்புறம் எதுவும் எழுதலியா மக்கா ?

    பதிலளிநீக்கு
  8. @ எல் கே

    நம்ம வண்டியெல்லாம் உங்களதைப் போல டாப் கியர்ல ஓடாதுங்ணா

    எதோ தட்டுத் தடுமாறி போய்ட்டிருக்கு
    ;-)

    பதிலளிநீக்கு