இன்று ஒரு குறள் !

சனி, ஜூலை 24, 2010

பதிவர் சவுக்கு சங்கரின் கைதுக்கு கடுமையான கண்டனங்கள்






சவுக்கு என்ற பெயரில் பதிவு ஒன்றை ஆரம்பித்து ஊழல் பெருச்சாளிகளின் திருவிளையாடல்களை அப்படியே பிட்டு பிட்டு வைத்து அவர்களின் முகத்திரையை கிழித்து தோரணமாய் தொங்க விட்டு கொண்டிருந்தார் சங்கர்   என்கின்ற முன்னால் காவல்துறை அதிகாரி

அவரின் பதிவுகள் கிசு கிசு பாணியில் இல்லாமல் பகிங்கரமாகவே ஊழலதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டே சொல்லப்பட்டிருக்கும், சில பதிவுகளில் தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமான டாக்குமெண்ட் நகல்களையும் இணைத்திருப்பார்.

இப்படி சவுக்கை சுழட்டி சுழட்டி அடித்து வெளுத்துக் கொண்டிருந்தவருக்கு கண்டிப்பாக ஆட்டோ வரும் என்று வாசகர்கள் பலர் எதிர்பார்த்ததை போலவே அவரும் எதிர்பார்த்திருந்தார். அதையும் பதிவு செய்திருந்தார். தனக்கு எதிராக என்ன செய்யலாமென்று, எந்த இடத்தில், யார்யாரெல்லாம் ஆலோசனை செய்கிறார்கள் என்பதையெல்லாம் கூட பதிவில் எழுதியிருந்தார்.


அவர் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டதாக நேற்று தான் எனக்கு, பதிவுலகம் மூலம் தெரிய வந்தது

"சரி, எந்தெந்த குற்றப்பிரிவில்  அவரை கைது செய்துள்ளனர் ? எப்படியும் அவரை ஒன்றும் செய்ய முடியாது. அவரிடம் தான், எழுதிய அனைத்திற்கும் ஆதாரம் உள்ளதே" என்று எண்ணியபடியே பதிவுகளை மேய்ந்தால், அதிர்ச்சி! அவரை கைது செய்ததற்கு காரணமாய் அவர் எழுத்து சொல்லப்படவில்லை. மாறாக, அம்மா காலத்து கஞ்சா கேஸ்போல், வேறு ஏதோ நாடகம் செட் பண்ணி,  ஜாமினில் வர முடியாத ஒரு இபிகோ வில்  கைது செய்துள்ளனராம். அட தேவுடா..........

உங்களிடம் நியாயம் இருந்தால், அவர் எழுத்தை நேர்மையாக அல்லவா சந்தித்து இருக்க வேண்டும் . அவர் தான் பேரை குறிப்பிட்டு , ஊரை குறிப்பிட்டு  பக்காவாக உங்கள் வண்டவாளங்களை சொல்கிறாரே. அப்படிப்பட்டவர் ஓடி ஒளியவா போகிறார்.

இந்த ஒரு செயல் மூலமே சவுக்கில் எழுதியவை அனைத்தும் ஒரு எழுத்து பிசகாமல் உண்மை என்றாகிவிட்டதே.


என்னமோ போங்க, "முட்டா குருவும் மூட சீடர்களும்" னு ஒரு சொல்வடை எங்க ஊர்ப்பக்கம் சொல்வாங்க, அதான் எனக்கு இப்ப ஞாபகத்துக்கு வருது. 'இம்சை அரசனும் இந்த எழவெடுத்த அதிகாரிகளும்' தான், தமிழ் நாட்டு அரசாங்கத்தை நடத்திட்டு வராங்க.

பாவம் மக்கள்!


ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கின்றது என்ற ஆணவத்தில்,  எழுத்துப்பணிக்கு மிரட்டல் விடுவது போல் தங்களைப்பற்றி எழுதிய எழுத்தாளனை பொய் வழக்கு தொடுத்து சிறையில் அடைத்திருக்கும் அதிகார வர்க்கத்திற்கும் இதற்கு துணை போன காமராஜ் என்ற நக்கீரன் துணை ஆசிரியருக்கும் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ஆனா யார் யாரெல்லாம் நெற்றிக்கண் திறக்கலாம்னு நாங்க தான் முடிவு பண்ணுவோம்) எனது கடுமையான கண்டனங்கள்

யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? என்று கண்டும் காணாமல், ஒரு சக எழுத்தாளனுக்கு நடக்கும் அக்கிரமத்தை தட்டி கேட்காமல், நடிக நடிகையரை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் ஊடகத்துறைக்கும் எனது கண்டனங்கள்

இப்படியெல்லாம் நடக்கும்னு எதிர்பார்த்திருந்தாலும் ஊழல் அதிகாரிகளை தோலுரிக்க தயங்காத சவுக்கு சங்கரின் நேர்மைக்கும் துணிவிற்கும் ஒரு ராயல் சல்யூட்

1 கருத்து: