இன்று ஒரு குறள் !

திங்கள், ஏப்ரல் 13, 2009

கலைஞரின் கேள்வி பதிலும், அப்பாவி தொண்டனின் பதில் கேள்வியும்






கேள்வி: போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும்- தவிர்க்கப்படாத நிலையில் முடிவொன்று ஏற்பட்டால், அப்போது பிரபாகரனை மரியாதையோடு நடத்த வேண்டுமென்று நீங்கள் சொன்னதை திசை மாற்றி- பிரபாகரனை நீங்கள் ஏதோ இழிவுபடுத்தி விட்டதைப் போல பழ.நெடுமாறனும், வைகோவும், ராமதாசும் உங்கள் மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார்களே?.


பதில்: கடந்த 16.4.2002 அன்று தமிழக சட்டப்பேரவையில் இவர்களுடைய இன்றைய அன்பு தலைவி ஜெயலலிதா, "விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது" என்று தீர்மானம் முன்மொழிந்து கொண்டு வந்தபோது- இந்த வீராதிவீரர்கள், சூராதி சூரர்கள் எல்லாம் எந்த நாட்டிலே இருந்தார்கள்?

நீங்க இருந்த நாட்டிலேதான், அதே போல நீங்க பொத்திகிட்டு இருந்த மாதிரிதான் அவங்களும் இருந்தாங்க.

இப்போது பிரபாகரனின் கெளரவம் போய்விட்டது என்று அலறித் துடிப்பவர்கள்- அப்போது வாய் நீளம் காட்டாததற்கு என்ன காரணம்?

காட்டியிருந்தா பிளாஸ்திரி ஒட்டப்படும்னு உங்களுக்கு இருந்த அதே பயம்தான் அவங்களுக்கும் போலிருக்கிறது.
இன்றைக்கு ஒரு சில நாடாளுமன்றத் தொகுதிகளுக்காக- கூனிக் குறுகி தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு- நம்மைப் பற்றி குறை கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?.

அவங்களும் உங்களைப்போல அடிமைதானே! என்ன எஜமானியம்மா தான் வித்தியாசம்.


கேள்வி: இலங்கை ராணுவம் தமிழர்களை வீழ்த்துவதற்கு ராஜபக்சேவுக்கு உதவி செய்யும் "அம்பி'' யார் என்பதை முதல்வர் கருணாநிதி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்று தா. பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?

பதில்: பாண்டியனுக்கு "அவரை'' பற்றி நான் நேரடியாகச் சொல்லவில்லை என்ற கோபம் போலும்!. ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவுக்கு துணை போய் இருப்பவர் இவர். கூட்டிக் கழித்துப் பாருங்கள். "அம்பி''யார் என்பது தெளிவாகும்!

இல்லையே உதாரணம் உதைக்குதே!

அலெக்ஸாண்டர் ஒரு நாட்டின் மன்னர் நம்ம ராஜபக்ஷே போல.

போரஸ் மன்னனும் நம் ஈழத்தின் தேசிய தலைவர் பிரபாகரனைப்போலவே ஒரு மன்னன்.
அலக்ஸாண்டருக்கு உதவிய அம்பி யும் மன்னனாயிற்றே ?!?!?!


கணக்கு வேற மாதிரி போவுதே தலைவா!


கேள்வி:- இலங்கை தமிழர்களைக் காக்க ஆட்சியை ஏன் கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி கேட்டிருக்கிறாரே?

பதில்: அவருடைய முக்கியமான குறிக்கோளே நாம் ஆட்சியிலே இருக்கக் கூடாது என்பது தான். கடைசி வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலே அமைச்சராகப் பொறுப்பேற்று, பதவிச் சுகம் அனுபவித்து விட்டு, அந்தக் கட்சிக்கே துரோகம் செய்துவிட்டுப் போனவர் அல்லவா?
அதிலேயும் நீங்க தானே தல முன்னோடி!

கடந்த பாஜக அமைச்சரவையில் இருந்து (இதிலே படுத்த படுக்கையாய் இருந்த மாறன் வேற ‘இலாகா இல்லாத மந்திரி’)
எல்லா சுகத்தையும் அனுபவிச்சிட்டு ஆட்சிக் காலம் முடியும் போது எஸ்கேப் ஆயி எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணியிலே சேரல.

அது போலத்தான் இதுவும்!

பதவி விலகுவதிலே எவ்வளவு அக்கறையாக உள்ள டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாஸ் மத்தியிலே மந்திரியாக இருந்த காலத்தில், "இலங்கை தமிழர் பிரச்சினையிலே மத்திய அரசு நடந்துகொள்வது சரியல்ல'' என்று இப்போது கூறுவதை அப்போதே கூறி, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிக் கொண்டிருந்தால் இவரை தமிழகம் ஒருவேளை நம்பியிருக்கும்!

இப்போ சொன்னீங்களே, இது மட்டும் நூத்திலே ஒரு வார்த்தை! உண்மையான வார்த்தை!!

ஆனா அதையும் கூட சப்தம் போட்டு சொல்லாதிங்க.

இந்த அறிக்கையிலே வைகோவை நீங்க கேட்டதையே சில வார்த்தை மாத்திப் போட்டு,ராமதாஸ் உங்களை திருப்பி இப்படி கேக்க போறாரு

"இன்றைக்கு ஒரு சில மந்திரி பதவிகளுக்காக கூனிக் குறுகி தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு, நம்மைப் பற்றி குறை கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது'


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக