இன்று ஒரு குறள் !

திங்கள், ஏப்ரல் 20, 2009

கி.பி.2059லேயும் கலைஞர் ஈழப்பிரச்சினைக்காக குரல் கொடுப்பார்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம் வளவனூரில் நடைபெற்றது.

இதில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,


ஆரம்ப காலத்தில் ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்காக முதல் குரல் கொடுத்தவர் கருணாநிதி.



85 வயதான காலத்திலும், சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்து வருபவர் கருணாநிதி.

---------------------------------------


18/04/09 அன்று கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கை:



இலங்கை தமிழர்களுக்கு துரோகி நானா? டாக்டர் ராமதாசா? என்பதை உலகத் தமிழர்கள் நன்கறிவார்கள். 1956ம் ஆண்டிலிருந்து இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவன் நான். ராஜபக்சே தொடுத்துள்ள போரை ஆதரித்து, போர் என்றால் அப்பாவிகள் கொல்லப்படுவது சகஜம் தான் என்றெல்லாம் கூறியவர் ஜெயலலிதா. அவருடன் ராமதாஸ் கூட்டணி வைத்திருப்பதிலிருந்தே உலகத் தமிழர்கள்-இலங்கை தமிழர் பிரச்சினையில் அவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்வார்கள்.
-----------------------------



மேலே ஒரு அமைச்சர் சொன்னது அடுத்து முதல்வரே சொன்னது. ஆக இதிலிருந்து என்ன தெரியுதுன்னா 1956 லிருந்து இலங்கை பிரச்சினைக்கு கலைஞர் குரல் கொடுத்திருக்காரு. இதில் யாருக்கும் ஐயமே வேண்டாம்.

இன்னுமொரு 50 வருடம் அவர் உயிரோடு இருந்தாலும், அப்பவும் அதாவது 2059 ம் வருடத்திலேயும் அவர் குரல் கொடுப்பார். அதிலேயும் சந்தேகம் வேண்டாம்.

அப்ப பிரச்சினை என்னடானு கேட்கிறீங்களா?

கேள்வி ரொம்ப சிம்பிள்?

எப்ப அவர் செயல்படுவார்?

வெறும் குரல் கொடுப்பதை நிறுத்திவிட்டு எப்போது அவர் ஈழப்பிரச்சினைக்கு செயல் படுவார்.


ஒரு ஏரியா இன்ஸ்பெக்டரிடம் ஒருவன் கேட்டானாம், ”இங்கே ஒரே திருடர்கள் பிரச்சினை அதி்கமா இருக்கே அதைப் பத்தி உங்களுக்கு அக்கறை இல்லையா”னு.

அதற்கு அவர் சொன்னாராம், ”நான் சிறுவனயிருக்கும் போதே இந்த திருட்டுத்தனங்கள் பிடிக்காமல் என் நண்பர்கள் மத்தியிலே பேசியிருக்கிறேன். இப்போதும் மாலை நேரங்களில் நண்பர்கள் மத்தியில் இதைப்பத்தி பேசிக்கொண்டுதான் இருக்கிறேன் எனக்கு அக்கறை இல்லையானு எப்படி நீ கேக்கலாம்னு” சொன்னராம்.

இதுக்கும் அதுக்கும் என்ன வேற்றுமை இருக்கிறது.

வாழ்க பேச்சுரிமை !
அதாவது பேச மட்டுமே உள்ள உரிமை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக