இன்று ஒரு குறள் !

திங்கள், பிப்ரவரி 06, 2012

அம்மாவிற்கு வந்த கோபம் - அரசியல் விமர்சகர் சோமாஸ் பேட்டி

சட்டசபையில் நடந்த முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்  மோதலை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் 10  நாட்கள் சட்டசபை கூட்டத்தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் நாம் அறிந்ததே.

இதைப்பற்றி பிரபல அரசியல் விமர்சகர் சோமாஸ் என்கின்ற சோமசுந்தரத்தை சந்தித்து அவரின் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள நேரம் வாங்கி அவரி்ன் இல்லம் சென்றோம்.

அவரின் அலுவலக அறையில் சிறிது நேர காத்திரு்ப்புக்கு பி்ன்,
 
"அத்வானி அத்வானி... தலைக்கு கீழே வச்சிக்கோ தலவானி தலவானி.. அப்படியும் பொழுது உனக்கு போகலைன்னா யூடூயூபில பார்த்துக்க மொத்வானி ஹன்ஸிகா மொத்வானி ஆஹா ஹன்ஸிகா மொத்வானி...."  என்று ஒரு பாடலை முணு முணுத்தபடியே வந்து சேர்ந்தார் .

வந்ததும் நேராக எங்களிடம், "முக்கியமான கேள்விகள் மட்டும் கேளுங்க   தனி தனியாய் பல  கேக்காதீங்க 'ஐ அம் வெரி பிஸி.'

இப்பக்கூட குஜராத்திலிருந்து ஒரு முக்கியமான காலுக்கு 'ஐ அம் வெய்ட்டிங்' இருந்தாலும் உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திட்டதால   தான் இங்கே வந்தேன. கேளுங்கள் 'குவீக் குவீக்'"   என்று   அவசரப்படுத்தினார்.



உடனே நாமும்,

சட்டசபையில் முதல்வர் "அதிமுக வினால்தான் கூட்டணி கட்சிகள் வென்றன  என்று கூறுகிறார்  ஆனால் எதிர்கட்சி தலைவர் ஊர் கூடி தானே தேர் இழுத்தோம். அதனால் இந்த வெற்றியில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது என்று பதிலுக்கு சொல்கிறார். அப்படி சொல்றதும்  நியாயமாக தானே இருக்கிறது. இதில உங்க கருத்து?

ஆமா உண்மைதான்! ஊர் கூடித்தான்யா தேரை இழுத்தோம். தேர்தான் நிலைக்கு வந்திடிச்சில்ல  அதோடு போக வேண்டியது தானே. அத உட்டுபுட்டு  தானும் அந்த தேரில் ஏறனும்னா என்ன அர்த்தம்.

இப்ப ராமாயணத்திலே எடுத்திக்கிட்டீங்கன்னா, ராமபிரான் தனியாவா போய் ராவணன் கிட்ட சண்டை போட்டாரு? அனுமான் தலைமையில் குரங்கு படையோடதானே போனாரு.

இன்னும் கூட சீதை் இருந்த இடத்தை கண்டுபிடிச்சது, சீதைக்கு தைரியம் சொன்னது, இலங்கையில் முதல் கலவரத்தை ஆரம்பிச்சது எல்லாமே அனுமான் தான். அதுக்காக தானே ராமர் தன்னை அனுமான் நெஞ்சில் சுமக்கிற பாக்கியம் தந்தார். அனுமானை தூக்கி ராமன் தன் நெஞ்சில் சுமக்கலியே.

அதே போல இவர் எதிர்கட்சி தலைவராய் முதல்வருக்கு மிக அருகாய் எதிரில் அமர்ந்திருக்கிறார். முதல்வருக்கு நிறைய முறை வந்தனம் செய்யும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. அதை , நினைத்து பெருமை படுவதை விட்டு விட்டு தனக்கு மரியாதை தரவேண்டும் என எதிர்பார்ப்பது சரியான அபத்தம் இல்லையா.. அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேண்டாமோ?



கேள்வி : தகுதி வேணும்னு நீங்களும் சொல்கிறீர்கள். தகுதி இல்லாதவர் என்றும் பார்க்க அருவருப்பா இருக்குதுன்னும் முதல்வரும் கோபமா சொல்றார். அந்த தகுதி என்னன்னு ........

முதல்வருக்கு கோபம் வராம வேற என்ன செய்யும்

பெரிய பதவிக்கு வர கீழ்கண்ட தகுதிகளில் ஒன்றாவது இருக்கணும்லே

ஒண்ணு அவாளாக இருக்க வேணும்

இல்லை

அட்லீஸ்ட் செவப்பு தோலாவாது இருக்கணும்

அதுவும் இல்லன்னா

அரைகுறை ஆடையில வந்து ஒடம்பையாவது காட்டி  நடிச்சி இருக்கணும்

அட அது கூட இல்லன்னா

அடுத்தவன் குடும்பத்திலயாவது உள்ள புகுந்து கொழப்பி, அவுங்க தாம்பத்யத்தையே ஆட்டையை போட்டு இருக்கணும்

இப்படி எதுவுமே இல்லாம எதிர்கட்சி தலைவரா வந்து எதிரில் உக்காந்தா முதல்வருக்கு கோபம் வருமா வராதா

அதுவுமில்லாம முதல்வர் இதுவரை தனக்கு முன்னாடி கை கட்டி நிக்கிற ஆம்பிளையைதான் பார்த்திருக்காங்க இந்த ஆளு என்னானா கை நீட்டியில்ல பேசுறாரு

நீட்டின விரலை ஒடைச்சி போடுறது தான் அவருக்கு கொடுக்கிற சரியான தண்டனைன்னு சொல்லாம போனதே அவரோட பெருந்தன்மையை தான் காட்டுது

அவுங்க மட்டும் அப்படி சொல்லியிருந்தா சட்டமன்ற உரிமை மீறல் குழு அதை அப்படியே தன்னுடைய தீர்ப்பால சொல்லியிருக்கும்

அப்புறம் வெரலு இல்லாம அவர பார்க்க அம்மாவுக்கு இன்னமுமில்ல அருவெருப்பா இருக்கும்

இல்ல என்ன இருந்தாலும் ....

சரி உங்களுக்கு கொடுத்த நேரம் முடிஞ்சுடுத்து, நீங்க போகலாம் என்று சர்ரென்று கிளம்பி போனார்.

நாமும், அவரை  பேட்டி கண்ட மகிழ்ச்சியிலும். அவரை நேரில் பார்த்த பாக்கியம் கிடைத்ததால்  எங்கள் தகுதி எந்த அளவில் உள்ளது என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டபடியும்  அலுவலகம் திரும்பினோம்.









பின் குறிப்பு : இது முழுக்க முழுக்க கற்பனையே. கடந்த 01/02/2012 அன்று சட்டசபையில் நடந்த நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறேன்

4 கருத்துகள்:

  1. பெயரில்லா2/06/2012 06:32:00 PM

    super,super!!!!

    பதிலளிநீக்கு
  2. //Sna Ad சொன்னது…
    ha ha nalla nagaichchuvai//

    வாங்க Sna Ad,
    உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. //பெயரில்லா சொன்னது…
    super,super!!!!

    நன்றி பெயரில்லாதவரே!

    பதிலளிநீக்கு