இன்று ஒரு குறள் !

ஞாயிறு, டிசம்பர் 30, 2012

ஒரு ஆணாய் நான் வெட்கப் படுகிறேன்

 
 
 
கனமான இதயத்துடன் 2012 ம் ஆண்டு நம்மை கடந்து செல்கிறது. காரணம் அடுத்தடுத்து வந்த வ்ண்புணர்வு சம்பவங்கள், செய்திகள்.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன போதிலும் இன்னும் நமது நாட்டில் பெண்கள் தனியாக, சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்பது எவ்வளவு வெட்க கேடான விஷயம்.
 
பெண்களை ஒரு உயிருள்ள சக ஜீவனாக, தனக்கென்று ஒரு மனமுள்ள மனுஷியாக,  உணர்வுகள் உள்ள ஒரு உயிரினமாக கருத முடியாத  ஆணாதிக்க மனநிலையிலே இந்த 21ம் நூற்றாண்டிலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய கேவலம்.
 
பெரும்பான்மையான ஆண்கள் அப்படி இல்லையே என்றாலும் கூட, அப்படிப் பட்ட சிறுபான்மையினருக்காக ஆண்கள் அனைவருமே தலை குனிய வேண்டியவர்கள் ஆகிறோம்.

நாட்டின் தலை நகரான டெல்லியில்  ஒரு சில நிமிட  அற்ப சுகத்திற்காக மிருக வெறி கொண்டு, எதிர் கால கனவுகளோடு துள்ளித் திரிந்த ஒரு 23 வயது மாணவியை வண்புணர்வு செய்து வெறியை தணித்து கொண்ட பின்னரும், எதிர்த்து போராடினாள் என்ற காரணத்திற்காக அவள் பிறப்புறப்பில் கையை விட்டு கையில் கிடைத்தை எல்லாம் வெளியில் இழுத்து எறிந்த அந்த மிருகங்கள் மற்றவர்களை போலவே ஒரு தாய்க்கு தான் பிறந்திருப்பார்களோ என்றே ஐயமுற வைக்கிறது.

அந்த மிருகங்களின் வேட்டைக்கு இரையான சகோதரி சில நாட்களாக மருத்துவத்தின் துணை கொண்டு உயிருக்கு போராடி வந்தவர் நேற்று முற்றிலும் தோற்றுப் போனார்.

இந்த மிருகங்களின் வேட்டை நடந்து கொண்டிருந்த நேரங்களில், யாருடைய கண்களிலும் இந்த வெறி சம்பவம் சிக்காமல் போனது தான் மிக பெரும் வேதனை.

ஒரு நாட்டின் தலை நகரிலே, வீதிகளில்  போலீஸார் ரோந்து சுற்றுவதில்லையா ?  வீடியோ கேமராக்கள் மூலம் நகரை போலிஸார் கண்காணிப்பதில்லையா? 
 
தலை நகரினிலே இந்த வசதிகள் இல்லையென்றால்,  நாட்டின் மற்ற பிற நகரங்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருக்கும் ?  இதில் இந்தியா வல்லரசாகிறது என்று விளம்பரம் வேறு.

இது தலைநகர லட்சணமென்றால், தாய்மையை மதிக்கும் நம் தமிழ் திரு நாட்டில் புனிதா என்ற 13 வயது இளங்குருத்து நாசப்படுத்தப் பட்டு கொல்லப் பட்டுவிட்டது.

இதை நாசப் படுத்தி விட்டு கொன்றவன், ஏற்கனவே குற்ற செயலில் ஈடுபட்டதால் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு வெளியில் வந்து, மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டு போலீஸாரால் தேடப் பட்டுக் கொண்டு வந்தவன்.

அப்படி தேடப்பட்டு வந்தவன் நிம்மதியாக சரக்கு வாங்கி மூச்சு முட்ட குடித்து விட்டு, போதை அதிகமாகி போக வேண்டிய ரயிலை தவற விட்டு ரயில் நிலையத்திலேயே மட்டையாகி கிடந்திருக்கிறான்.
 
அடுத்த நாள் தெளிந்து, மிக சாவகாசமாக நடை பயணமாக ஊர் போக, வழியில் வந்த அந்த சிறுமியை பார்த்ததும் வேட்டை ஆடி இருக்கிறான் (அந்த நேரம் அந்த சிறுமிக்கு பதில் ஆடு மாடு வந்திருந்தாலும் விட்டுருக்க மாட்டான் போல).
 
அது வரையிலும் போலிஸார் அவனை தேடிக் கொண்டே..டே..டே..டே..  இருந்திருக்கிறார்கள். ஒரு வேளை அவன் லோக்கலில் இருப்பது தெரியாமல் லண்டனிலும் பாரிஸிலும் போய் தேடிக் கொண்டிருந்தார்களோ என்னமோ.

இந்த இரண்டு சம்பவங்கள் தான் என்றில்லை இது போல் இன்னும் எண்ணற்ற வண்புணர்வுகள் அங்கங்கே தினமும் அ்ரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது.
 
சில சின்ன செய்தியாக பத்திரிக்கையில் இடம் பெறுவதும், பல போலீஸ் மற்றும் ஊடகங்களின் கண்களுக்கு படாமலே போய் விடுவதாகவும் இருக்கிறது.
 
ஒரு 3 வயது குழந்தையை கூட குழந்தை என்று பார்க்காமல், தன் இச்சையை தீர்க்க கிடைத்த எதிர் பாலினம் என்று பார்க்க தூண்டும் காம வெறி பிடித்தவர்களின் மத்தியில் தான் நாமும் வாழ்கிறோம் என் நினைக்கவே வேதனையாய் இருக்கிறது.
 
சகோதரிகளே, நான் வெட்கப் படுகிறேன் !
ஆம் !!  ஓரு ஆ்ணாய் நான் வெட்கப் படுகிறேன் !!!

செவ்வாய், நவம்பர் 06, 2012

கருத்துரிமை காப்போம்

I-T ACT SECTION 66 A - தேவை மறு பரிசீலனை





I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்(http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.
 
 
--------------------------------------------------------------------------------------------------------------------------
 
 நன்றி தருமி அய்யா

ஞாயிறு, மே 27, 2012

இது தான் சவுதி அரேபியா - நெயில் பாலி்ஷ் பூசிய நகங்களுடன் வந்த பெண்ணுடன் மோதிய செளதி போலீஸ்!

இன்று தட்ஸ் தமிழில் மேய்ந்த போது இந்த செய்தி கண்ணில் பட்டது. உடனே யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்று பதிவேற்றி உள்ளேன்.

இங்குள்ள சிலரால் சவுதி ஒரு புனித பூமி ரேஞ்சுக்கு பேசப் படுகிறது. அந்த விசுவாசத்தின் உச்ச கட்டமாய் இந்தியாவையும் மட்டப் படுத்த தோன்றுகிறது.

 இதற்காக இணையத்தில் தேடியலைந்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் செய்திகளையும், ஒளி, ஒலிப் பதிவுகளையும் பதிவேற்றுகிறார்கள்.

 அவர்களுக்கு, அவர்களின் புனித பூமியின் லட்சணத்தை புரிய வைக்க, தானாக வந்து கண்ணில் பட்ட இந்த ஒளிப்பதிவை காண தருகிறேன்.

கீழே தட்ஸ்தமில் செய்திக்கு பிறகு  சுட்டியை சொடுக்கி பார்க்கவும்



நெயில் பாலி்ஷ் பூசிய நகங்களுடன் வந்த பெண்ணுடன் மோதிய செளதி போலீஸ்!


லண்டன்: செளதியில், நெயில் பாலிஷ் பூசிய நகங்களுடன் வந்த பெண்ணுடன் மத மாண்புகளைக் காக்க நியமிக்கப்பட்ட போலீஸார் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செளதியில் பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். இதில் பெண்களுக்குத்தான் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், விதிமுறைகள். வாகனம் ஓட்டக் கூட அங்குள்ள பெண்களுக்கு அனுமதி கிடையாது.

இந்த நிலையில் கை விரல்களில் நெயில் பாலிஷ் பூச்சுடன் வந்த பெண்ணை தடுத்து நிறுத்தி மத மாண்புகளைக் காக்கும் போலீஸார் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சியை அநத்ப் பெண் யூடியூபில் போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

அந்தப் பெண்ணின் பெயர் விவரம் தெரியவில்லை. அவர் ஒரு ஷாப்பிங் மாலுக்கு வருகிறார். அவரை மாலின் நடுப்பகுதியில் வைத்து போலீஸார் தடுக்கின்றனர். கையில் நெயில் பாலிஷ் போட்டுள்ளதன் மூலம் மத மாண்புகளுக்குப் புறம்பாக நடந்துள்ளீர்கள். எனவே உள்ளே வரக் கூடாது என்று உத்தரவிடுகின்றனர்.

இதைக் கேட்டு கோபமடைந்த அப்பெண், என் கையில் என்ன இருக்கிறது என்பதை பார்க்க வேண்டிய வேலை உங்களுக்கு இல்லை. அது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது. என்னைப் பின் தொடர்ந்து வர நீங்கள் யார் என்று ஆவேசமாக கூறுகிறார்.

ஆனால் அவரை உள்ளே விட அனுமதிக்க முடியாது என்று போலீஸார் கோபத்துடன் கூறுகின்றனர். அவர்களுக்கு அதே கோபத்துடன் பதிலடி கொடுத்து வாக்குவாதம் புரிகிறார் அப்பெண்.

மாலின் நடு ஹாலில் நின்றபடி நடந்த இந்த வாக்குவாதம் செளதியில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனராம்.

  - நன்றி  tamil.oneindia.in



சொடுக்கி பார்க்கவும்

http://www.youtube.com/watch?v=OpUUOYRLW3k




சனி, மே 26, 2012

அம்மாவின் கலைஞர்தனம்

ஜெவுக்கம் கலைஞருக்கும் எனக்கு தெரிஞ்சி ஒரே ஒரு விஷயத்திம் மட்டுமே ஒற்றுமையுண்டு அது என்னான்னு அப்புறம் சொல்றேன்.
மற்றபடி இருவரும் செயல்பாடுகளும் வெவ்வேறு வகையானது.

ஜெவின் செயல்களில் 'நான்' என்ற ஆணவம் இருந்தாலும், வழ வழா கொழ கொழா என்று  இருக்காது. எப்போதும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தான். 

அது விடுதலைபுலிகள் இயக்க எதிர்ப்பு ஆகட்டும் வீரப்பன் என்கவுண்டர் ஆகட்டும் 

இன்னும் சங்கராச்சாரியார் கைது, வாஜ்பாயி ஆட்சி கவிழ்ப்பு, பிரபாகரன் கைது தீர்மானம், பொடா அரசு ஊழியர் சாலைப்பணியாளர் பிரச்னைகள் என்று தொடர்ந்து 

இப்போது தலைமைசெயலகம் மாற்றம், சமச்சீர் கல்வி கைவிடும் முயற்சி என்று சொல்லிக்கொண்டே போகலாம். 

மக்கள் என்ன நினைப்பார்கள், மீடியா என்ன சொல்வார்கள் என்ற எண்ணம்  கிஞ்சித்தும் இல்லாமல், தான் நினைத்தபடி ஒரு முடிவு எடுத்து  அதில் உறுதியாய் நிற்பது அவரது தனி ஸ்டைல்.

ஆனால் கலைஞரோ  எவ்வளவு முக்கியமான பிரச்னையிலும் தன்னுடைய  முடிவை தெளிவாக அறிவித்து அதை முன்னெடுக்க  இயலாமை

சட்ட எரிப்பு போராட்டம் நடத்திவிட்டு பின் நீதிமன்றத்தில் ஒரு காகிதத்தைதான் எரித்தோம் என்று கூறுதல்

சங்கராச்சாரியார் வழக்கு மொக்கையாகும் வரை கண்டுகொள்ளாமல் இருப்பது, ஒரு பக்கம் மத்திய அரசில் பங்கெடுத்துக்கொண்டே இன்னொருபக்கம் ஈழப்போருக்கான போராட்டங்கள் நடத்துதல்

  நான்கு மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்திவிட்டு இறுதியில் போர் நின்றுவிட்டது என்ற பொய்யாக அறிவித்தல்

இப்படி பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க மல்டி ரோல்களில் மிளிர்வது கலைஞர் ஸ்டைல்.

ஆனால் இப்போது அது ஈழத்தமிழர் விஷயத்தில் இளித்துக்கொண்டு போய்விட்டது என்பது வேறு விஷயம்


இப்படியிருக்க

சமீபத்தில் ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற 3 பேரின் உயிர் போகும் பிரச்சினையில் ஜெ கலைஞர் போல மங்காத்தா ஆடியிருக்கிறார்.  

கடந்த மாதத்தில்  தமிழக சட்டமன்றத்தில், மூன்று பேரின் தூக்குத்தண்டனையை ரத்துச் செய்ய சொல்லி மத்திய அரசைக் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியவர்,

 இந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மூவரின் மரண தண்டனை ரத்து செய்ய கோரும் வழக்கில்,  மனுவையே தள்ளுபடி செய்யும்படி ஜெவின் தமிழக அரசு கேட்டுகொண்டுள்ளது.

என்ன ஒரு தெளிவு அம்மையாருக்கு!

தமிழர்களை ஏமாற்றும் விஷயத்தில் ஜெவும் கலைஞரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று வைகோவும் அறிக்கை விட்டு இருக்கிறார். ஆனால் இதுவரை  ஜெவிடமிருந்து  எந்த பதிலும் இல்லை.

பொதுவாக ஜெவின் அல்லக்கைகள் அவர் பெயர் போட்டு அடிக்கும் சுவரொட்டிகளில் "புரட்சிதலைவி அம்மா" அவர்கள் என்றே குறிப்பிடுவர்.
இனி அதை மாற்றி "கலைஞர் அம்மா" அவர்கள் என்று குறிப்பிட்டாலும் 
பொருத்தமாகவே இருக்கும்



டிஸ்கி : ஜெவுக்கம் கலைஞருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, 'மக்களை ஏமாற்றி சுரண்டுவது' என்பது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியணும்னா, உங்களுக்கு இவங்க நிச்சயமா தேவைதான்.

வேற என்னத்த சொல்ல :-(

துளிகள் : தமிழ் புத்தாண்டு, கலெக்டர் சகாயம், ராமஜெயம்



 நான் போன இடுகையில் எழுதிய மாதிரியே முன்னாள் மந்திரி கே என் நேருவின் தம்பி கொலை வழக்கில், போலீஸ் ஒரு இஞ்ச் கூட முன்னேறியது மாதிரி தெரியவில்லை. இன்னமும் துப்பு துலக்குகிறார்களாம். இதில் அம்மா ஆட்சிக்கு வந்ததால் சட்டம் ஒழுங்கு ரொம்ப சீர்பட்டு விட்டதாக பெருமைமிகு பிரசாரம் வேறு.



மதுரை கலெக்டர் சகாயம் கோ ஆப் டெக்ஸ் க்கு மாற்றம் செய்ய பட்டிருக்கிறார்.
திறமை மிகுந்த, ஊழலற்ற, மக்கள் நலனை முதன்மையானதாக கருதிய கலெக்டர் என் சாதாரண உழைக்கும் மக்களால் அனுமானிக்கப்பட்ட திரு சகாயம், ஒரு உப்பு சப்பில்லாத துறைக்கு திடீரென மாற்றப்பட்டதன் மர்மம் என்னமோ ???!!!

பொதுவாக சில வருடங்களாக, ஜனவரி மாதத்திலும் ஏப்ரல் மாதத்திலும் தமிழ் வருட பிறப்பு எதுவென்று நிறைய விவாதங்கள் நடக்கும். ஆனால் மே மாதமான இந்த மாதத்தில், ஓரிரு நாட்களுக்கு முன் இதைப் பற்றி இடுகை ஒன்றை படிக்க நேர்ந்தது.



அதில் தமிழ் புத்தாண்டை தை மாதம் முதல் தேதியாக அறிவித்த கருணா்நிதி செய்தது சரி என்றும் அதை திரும்ப சித்திரை ஒண்ணுக்கு மாற்றிய ஜெயலலிதா செய்தது ஆர்ய சூழ்ச்சி என்றும் சொல்லப்பட்டிருந்தது.

மேலும் அப்படி தமிழ் புத்தாண்டை மாற்றிய ஜெவை கண்டிக்காத தமிழறிஞர்களையும் அது சாடி இருந்தது.

இதை பார்த்ததும் என் மனதில் எழுந்த எண்ணங்கள்

இதற்கு மட்டுமா தமிழறிஞர்கள் மவுனியாக இருக்கின்றனர் அண்ணா நூலக மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைக்கும் தானே. அவர்கள் தான் என்ன செய்வார்கள் பாவம்!

எதிர்கட்சியின் ஹீரோவாக கொண்டாடப்பட்ட நம்ம அஞசாநெஞ்சன் அண்ணாச்சியே மம்மியை  பார்த்து பம்மி கிட்டு இருக்கும்போது எந்த ஒரு பலமான பின்புலமும் இல்லாத தமிழ் அறிஞர்கள் என்ன செய்ய இயலும்?

மீண்டும் சந்திப்போம் நண்பர்களே